Monday, July 11, 2011

யாரு அதிக இலவசம் தராங்க.....

யாரு அதிக இலவசம் தராங்களோ அந்தக் கட்சி ஜெயிக்குது ஏன்?

இலவசம் தரதுன்னால மக்கள் வாங்குதா? இல்ல மக்கள் வாங்கர்துனால அவங்க தராங்களா?. பொருள் வங்குரவன் விரும்பி வாங்குனாதான கடைக்கார விப்பான். யாரும் வாங்காம இருந்தா? கடைய மூடிட்டு போய்டுவான் இல்லியா?

இப்போ தப்பு யார்கிட்ட இருக்கு? அரசியல் வாதி கிட்டயா? இல்ல மக்கள் கிட்டயா?

நாம உண்மையா சிந்திக்கிறதா இருந்தா யார மாத்தணும்? யாரா குறைசொல்லனும்? அவன் குடுக்குறான், அவன் கெடுக்குரான்னு சொல்லி சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டு. எதாவது ஒரு கட்ச்சிக்கு ஓட்ட போட்டுட்டு வேலைபாக்க போய்டறது.

என்ன அரசியல் நடக்குது இங்க? ஒன்னும் மட்டும் நல்ல தெருஞ்சுக்குங்க எதுவுமே இலவசம் இல்ல. நீங்க வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும், எப்டியாவது ஒரு வழியில நீங்க பணம் குடுத்துதான் ஆகணும்.

அடுத்தது விலை வாசி- பெட்ரோல் வில 50 - 60 ரூபாய்க்கு உயர்ந்துட்டா, உடனே எல்லா பொருளோட விளையும் ஏறும் சரி, வில கொறஞ்சா எத்தனப் பேரூ விளைய குறைக்கிறாங்க சொல்லுங்க?. இதுக்கும் அரசியல்வாதி காரணமா? மக்களோட பேராசக் காரணமா? இல்ல ஒரு பொருளை பதுக்கல் பண்ணி விலையேற்றம் ஆகவைத்து பிறகு சந்தைக்கு அதிக விலைக்கு கொண்டு வாராங்களே, அதுவும் அரசியல் வாதியா?

நீங்க வேண்டாம்னு சொன்னா யாரும் உங்கள மிரட்டப்போவதில்லை? மிரட்டவும் முடியாது?

அது என்ன? எல்லாரும் கலைங்கர மட்டும் குறை சொல்றீங்க, போன தேர்தல்ல யாருதான் அறிவிக்கல. எப்படியும் எல்லாரும் அறிவிக்கப் போறாங்க, அதுல யாராவது கண்டிப்பா வரப்போறாங்க, இதுல என்ன ஒருத்தர மட்டும் எல்லாரும் குறை சொல்றது. என்னமோ இப்போ கலைங்கரத் தவிர மத்தவங்க எல்லாம் காமராஜர் மாதிரி?

நான் கலைங்கருக்கு சப்போர்ட் பண்றதா யாரும் நினைக்க வேண்டாம், இதுவே MGR கொடுத்தப்ப பொன்மனச் செம்மல் அப்படீன்னு சொன்னது ஏன்? எனக்கு புரியல?

இன்னொன்னு நல்ல தெரிஞ்சுக்குங்க எல்லாரும் பேசும்போது, அவங்களையும் அவங்க பொருளாதரத்தையும் மனசுல வச்சு மட்டும் பேசக் கூடாது. இன்னமும் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசிய நாம்பி நெறைய குடும்பங்கள் இருக்கு, காப்பீட்டுத் திட்டத்த வச்சு ஒருவேள மாத்திர வாங்க வழியில்லாதவன் எத்தனையோ மக்கள் நல்ல குனமடைஞ்சு இருக்காங்க. அறிவிச் அல்லது நிறைவேத்துன திட்டம் பத்துல நாலு தப்பா அத புறந்தள்ளுங்க, ஆறு சரியா? அதப் பாராட்டுங்க? எல்லாமே தப்பா? ஆட்ச்சிய மாத்தி ஓட்டுப் போடுங்க.

எல்லாரும் அவங்க நெனைக்கிற கட்சி ஜெயிக்கனும், அவங்க நெனைக்கிற தலைமை இருக்கணும். இதுதான் அவுங்க அவுங்க ஆசை.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய