Monday, November 29, 2021

மாநாடு (திரைவிமர்சனம்)

நான் வெகுநாள் பிறகு தியேட்டரில் பார்த்த சிலம்பரசன் படம்... மாநாடு.. 

Edge of tomorrow படத்தின் இரண்டாவது பாகம் என்று சொன்னாலும்... அது இது என்று எதைச்சொன்னாலும்...

தமிழ் படங்களில் ஒரு வித்தியாசமான நல்ல படம் என்பதை ஒருபோதும் மறுக்க இயலாது...

வெல்டன் வெங்கட் பிரபு...

வெங்கட் பிரபுவின் சினிமா வாழ்வில் கவிஞர் வாலி ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டர் என்பதை அவரின் மறைவுக்கு பிறகு எல்லா படங்களிலும் போடும் miss you title card சொல்கிறது...

திரைக்கதை அமைப்பு... லாஜிக் மீராத வண்ணம் மிக நேர்த்தி மிக தெளிவு...

எப்படி சில சுயநல அரசியல்வாதிகளால் ஒரு குறிப்பிட்ட மதம் பலிகடா ஆக்கப்படுகிறது என்பதை மிக நேர்த்தியாகவும், அதே நேரத்தில் வாரிசு அரசியலை சீண்டும் திரைக்கதை வசனத்தையும், மதக்கலவரங்கள் நடப்பதன் உள்நோகத்தையும் தைரியத்துடன் அதுவும் குறிப்பாக கோவயை கதைக்களமாக்கி சொல்லியுள்ள வெங்கட் பிரபுக்கு இன்னும் வாழ்த்துக்கள்... 

சிலம்பரசனின் நடிப்பு மிக அழகாக அற்ப்புதமாக குறிப்பாக எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட தன்னால் செய்ய இயலும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதற்க்கு பாராட்டுகள்....

சிலம்பரசன், SA சந்திரசேகர், வாகை சந்திர சேகர், மனோஜ் பாரதிராஜா, டேனி, YG மஹேந்திரன் என எல்லோரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும்.... இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டும் அளவிற்க்கு மிக அற்புத கதாபாத்திரமும் அதன் வரம்பு மீராதா நடிப்பும் SJ சூரியா வின் வசமாகிறது.... படமுழுக்க அவரே வியாபிக்கிறார்... கைத்தட்டுகளை அள்ளுகிறார்...

அதோடு ஒரே ஒரு பாடல் தான் படத்தில்... மனதில் நிற்க்கவில்லை... ஆனாலும் பின்னனி இசையில் இன்னொருமகுடம் யுவனுக்கு... யுவன் எப்போதும் முடிசூடா மன்னன் இசையில்...

மொத்தத்தில் மாநாடு... தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு இன்னொரு மாபெரும் சினிமா மாநாடு...

Monday, July 23, 2018

தழல்

கனியக்கனிய கனிவது காதல்,
 தனியத்தனிய தனியாதது காமம்.

என் எழுதுகோலும் உன்மேல் காதல் கொள்ளுமோ என்ற பயமெனக்கு உன் அழகை வர்ணித்தது நான் வார்த்தை வடிக்கையிலே.

புறம்பற்றியெரியும் எண்ணத்தின் தழல் தனிக்க புன்னகையள்ளி பூசிக்கொள்கிறேன் இருப்பினும் புன்னகையும் புகைந்தோடும்படி எரியூட்டப்படுகின்றது எண்ணங்கள். 

Thursday, December 1, 2016

எண்ணோட்டங்கள்....



தனிமை தணல் மூட்ட .....
எரியும் எண்ணத்தில் புகைந்து கொண்டிருக்கிறது நினைவுகள்!

தெறிக்கும் ஒவ்வொரு சாம்பலும் அதன் துகள்களும்
வலிகளா....? வேதனைகளா....? இல்லை சுகங்களா....? என்று
அறியும் முன்னமே சுட்டுவிடுகின்றன,

அதனை தணிக்க முடியாமல் தவிக்கின்றேன்
மீண்டும் மீண்டும் தனிமையில் ......




சாற்றை விரட்டுவிட்டு
சக்கையை சுமந்து திரியும் வாழ்வில்
கடவுளை கணியவைக்கும் நம்பிக்கை
பூனையை புலி என்றும்
புலியை எலி என்றும் .....



நான் செல்லும் சாலைகள் அனைத்தும்
தொடங்கிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் முடிகின்றன

ஆனால் ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு சாலையிலும்
வேறு வேறு மரங்கள்  

Thursday, January 5, 2012

ஞானத்தின் விசாலம்...


அனைத்தும் அறிந்துவிட்டதாய்
துள்ளிக்குதிக்கிறது ஆணவம்
வக்கிரமும் வாஞ்சையும்
வரிசைகட்டி வந்து நிற்க

தேவையைமிஞ்ச தேடுகிறது ஆசை
அதனை மிஞ்சும் பேரசை
வன்மம் என்பதும் அதர்மம் என்பதும்
பிறப்பெடுக்கும் தருணம்
இதுவாகவே இருக்க
கோபம் பொறாமை கொடிகட்டி நிற்க

மனம் வாடி, துன்பம் தேடி
வாழ்க்கையை உணராமல் வாழ்வதற்கு

ஆறுக்கு
ம் குறைவே நலம்

Wednesday, January 4, 2012

அறிவற்ற அரசு இயந்திரம்


 மக்களுக்காக மக்களால் நடத்தடப் படுவதுதான் ஜனநாயகம், அப்படி என்றால் ஜனநாயகம் என்பது  நமக்காக நாமே செய்வதுதான் என்பது நேரடிபொருள்படும் இல்லையா? இதை நாம் முழுதாய் உணர்ந்திருக்கிறோமா? என்றால் இல்லை என்று என்னால் அடித்து சொல்லமுடியும்.

 இங்கு இருக்கும் மக்களும் சரி, மக்களில் இருந்து வந்து ஆட்சி செய்யும் அரசியல்வாதியானாலும் சரி, அதே மக்களில் இருந்து பணியாற்றும் அரசாங்க அதிகரியானாலும் சரி யாருக்குமே இந்த தெளிவு இருப்பதில்லை, அப்படி அது இருக்குமேயானால் இவ்வளவு ஒரு கேவலமான அரசாங்கமோ அரசு எந்திரமோ இருக்காது.


 ஒரு அரசாங்க மருத்துவமனையில் கண்டபடி புலம்பி நின்றார் ஒருவர், சுத்தமில்லை, அக்கறை இல்லை, கவனிப்பு இல்லை, உங்களுக்கு எதுக்கு ஒரு உடுப்பு, மாதா மாதம் சம்பளம், அரசாங்க வசதிகள் என்று பொரிந்து தள்ளினார், நானும் அதேபோல் ஒருமுறை அல்ல பலமுறை கத்தி இருக்கிறேன் இருக்கிறேன், சரி அவரை சமாதனப்படுத்தலாம் என்று நீங்கள் யார்? என்ன நடந்தது? என்று நான் கேட்க அவர் பொதுப்பணித்துறை ஊழியராம் நோயாளியாய் இருந்த அவரது உறவினர் ஒருவரை அவர்கள் சரியாக கவனிக்கவில்லையாம், எனக்கு சிரிப்பதா இல்லை அழுவாத என்று தெரியாமல் விழித்தபடி நின்றதுதான் மிச்சம். ஏன் என்றால் எங்கள் வீதி சாலை கிண்ணம், சாக்கடை சந்தனம்.

  அப்படிப்பட்ட துறையை சேர்ந்த ஒருவர் இன்னொரு துறையை சேர்ந்தவர்களை வசை படுகிறார். இதை என்னவென்று சொல்வது? என்று நினைத்து எனக்குள் நான் நொந்துகொண்டேன்.




 இதுதான் இன்றைய அரசு எந்திரத்தின் நிலைமை, புயல் கரையை கடக்கும் என்று இரண்டு மூன்று  நாட்களாகவே தகவல் வந்தவண்ணம் இருக்க, கடந்து போன பின்னும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்றால் அப்படி என்னதான் வேலை செய்கிறார்கள் இவர்கள் என்று கேட்கத்தோன்றுகிறது.

 அப்படி யாராவது ஒருவன் பொங்கியெழுந்து கோவத்தில் குதறிவிட்டால்கூட உடனே போராட்டம் வேலை நிறுத்தம், ஏன்? அவனை ஒருவன் அடித்தால் நாளை நம்மை இன்னொருவன அடிப்பானே என்ற பயம். அதற்காக தவறுசெய்வதையோ கடமை தவறுவதை சரி செய்துகொள்வதில்லை, போராட்டம் வேலைநிறுத்தம் செய்து பூசி மொழிகிவிடுவது. நல்லா இருக்கு உங்க நியாயம்.

 ஒருவன் தவறு செய்தால் அதை கேட்டு கண்டிக்கவே
ண்டியவன் அதே தவறுசெய்கிறான், அவனை கண்டிக்க வேண்டியவன் அவனை மிஞ்சி தவறு செய்கிறான் இது ஒரு சங்கிலித்தொடராய் போய்கொண்டே இருக்கிறது, இவர்களுக்கு ஒரு பாதிப்பென்றால் அடுத்தவனை குறை சொல்லும் இவர்கள், அடுத்தவன் இவர்களால் அடையும் பாதிப்பை பற்றி கவலை கொள்வதில்லை பிறகு இவர்கள் மட்டும் எப்படி அடுத்தவரிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.






 இங்கு யாருமே அவர் அவர் முதுகை பார்க்காமல் அடுத்தவர் முதுகை பார்த்து சிரிப்பவராய் இருக்கும் போது, இது ஒரு அறிவற்ற செயல் என்பது முழுமையாய் நிருபணம் ஆகிறது. இது குறிப்பிட்ட துறைகளில் மட்டும் அல்ல எனது நேரடி அனுபவத்தில் அனைத்து துறைகளிலும் இதே நிலைமைதான்.

டிஸ்கி: இவர்களை தவிர்த்து கண்ணியமாகவும், கடமை உணர்வோடும், நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஒருசிலர் இருக்கவே செய்கிறார்கள் ஆனால் அவர்கள் படும்பாடு வேதனை.