Monday, July 11, 2011

நிலாச்சோறு

பார்வை
தொட்டுவிடும்
தூரத்தில்தான்

ஆனால்
எட்டிப்பிடிக்க
முயன்று
ஏமாற்றம்
மட்டும் ஏனோ?

தொட முயன்ற
தருணமெல்லாம்
தேய்பிறையாகி
காணாமல் போக

விலகும்போது
வளர்பிறையாகி
கண்களுக்கு மட்டும்
முழுநிலவாய்

அழகிய அம்புலியை
அடைந்துவிட
அழுது புரண்டாலும்
கனவில் மட்டுமே
கைக்கெட்டும்
நினைவில் அன்று

என்றுணர்ந்து
தேற்றிக் கொண்டாலும்

இன்றுவரை எனக்கு காதல்
ஒரு நிலாச்சோறு மட்டுமே

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய