Monday, July 11, 2011

வேல்விழியா?

வேல்விழியா? இல்லை
விழிவழி வேலா?

பட்டைநெற்றி பளபளவென!
தொட்டிட விரலோ விறுவிறுவென!

கத்தை குழலோ காதுகளோரம்
காமத்தீயாய் கரைபுரண்டோடுது!

நெற்றிப்புருவம் தரித்தபாணம்
விரைந்துவருகுது திரித்திடவே!

நாசியின்நீளம் ஒலிந்துவந்து
விழைகுவழைக்குது மெலிந்துவந்து!

தேன்சுளையோ எனநினைய
தானிதழே என தளிர்க்குது!

முத்தாய் இங்கே பளக்குது
பற்க்கோர்வை தான் சிரிக்குது!

வாழைச்சுருளின் மென்மைதானோ?
அதுபடர்ந்த மேனிதானோ?

கொங்கையோ பொதிகையோ?
குவிந்திருக்கும் குமரியோ?

இடையே இல்லையெனவோ
பின் நோக்க அழகிருந்திடவே

வாழைத்தண்டாய் வழுவழுவென
கால்களிரண்டை கண்டிடலாமோ?

மலர்க்கரம்தான் தழுவிடுமோ?
பூவிரல்தான் நழுவிடுமோ?

மோகத்தில் எனை மாய்த்திடுமோ?
சொர்கத்தில் கொண்டு சேர்த்திடுமோ?

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய