Monday, July 11, 2011

தவிர்க்க நினைக்கும் கணங்கள்....

கணப்பொழுதில் கவர்ந்துவிட்ட இனமொன்று

சலனம் காட்டி சட்டென்று கடந்து சென்றுவிட

பதிந்துவிட்டது பசுமரத்து ஆணியைப்போல்
பற்றிக்கொண்டது பகீரென்று பரவசம்

எங்கிருந்தோ எரிபொருளை ஏற்றிவந்து
தெளித்துவிட்டு போனது வளைவின் நினைவுகள்

ஆனந்தம் கொடுத்தாலும் அனலாய் வீசியது
சுவாலை சுட்டெரித்தது, கனலாய் கழிந்தது கணங்கள்

நினைவுகளை திருப்பமுயன்றும் கலைக்க முயன்றும்
தொட்டுவிட்டது தோல்வியைத்தான் தவிர
வேறொன்றும் இல்லை

ஆட்டிவைத்ததை அணைக்கத்தான் முடியவில்லை
அடக்கவாவது முடிவு செய்து முயன்று

இயற்கையின் கீறல் வழி தெளித்துவைத்து
தணிக்க முயன்று தணித்ததாய் தோன்றினாலும்

எப்பொழுது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும்
பக்குவத்தோடு பயமுறுத்தி வருகிறது

தவிர்க்க நினைக்கும் கணங்கள்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய