Saturday, July 30, 2011

எதிர்பாராத் திருப்பம்...

பலரும் உலாவி வரும் நெடுஞ்சாலையது
காற்றோடு கலந்தது போல் ஒரு பயணம் அங்கே
நொடிக்கொன்றாய் என்னை கடக்கிறது பல
அதிர்வலைகள் அடிக்கடுக்காய் சில
எதிர்நோக்கி பறந்துவரும் பூச்சிகளும்
சில தூசிகளும் தடந்தெறியாமல்
தெரித்துப்போயின

பயணம் ஊர்வதாயில்லை
பறப்பதாயிருந்தது
எல்லைக் கற்களை எண்ணி முடியவில்லை

விட்டு விட்டு போடப்பட்டிருந்த கோடு
விடாமல் ஒரே கோடாய் மாறிவிட்டிருந்தது

திடீரென வந்த திருப்பத்தை நான் கவனிக்கவில்லை
எச்சரிக்கை பலகை இருந்தும்

தடம்புரண்டது வாகனம்
தடைப்பட்டது பயணம்

பலமுறை இதுவே நடந்தாலும்
முதன்முறை மட்டும் தான் அது
எதிர்பாராத் திருப்பம்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய