Saturday, November 26, 2011

உணர்வே மிச்சமென...


புதைக்கப்பட்டவை உடல்கள் அல்ல
வீரத்தின் விதைகள்

ஒவ்வொரு துளி செந்நீரும்
விடுதலைக்கு வீறுகொண்டு மீண்டுவரும்

செய்த தியாகம் தரணியெங்கும்
செழித்தோங்கும்
ஒவ்வொருவருக்கும் ஆயுதம் 
ஒவ்வொருவரும் ஆயுதம் 
மானம் காக்க உயிரை துச்சமென
உணர்வே மிச்சமென......



நன்றி: google

"புலிகள்" எங்கள் ராணுவம்...



எங்கள் தலைவா

தமிழ்த் தாயின் தலைமகன் நீ
எங்களின் வீரத் திருமகன் நீ
அடிமை விலங்கை அடித்துடைத்தாய்
தமிழனின் அவமானம் துடைத்தெடுத்தாய்

கொடுமைகள் கண்டு கோபம் கொண்டாய்
வீரத்தின் விளைநிலம் நாமே என்று வீருகொண்டாய்
நாடே வீடென்று காடு புகுந்தாய்
களமே கதியென்று ஆயுதம் கொண்டாய்
சமரே சரி என்று சரித்திரம் படைத்தாய்

தனிமனிதனாய் எழுந்தாய்
தாயகம் கொணர்ந்திட அழைத்தாய்
அமைப்பினை வளர்த்தாய்
நரிகளை அழித்தாய் 


வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
விவேகமற்ற வீரம் முட்டாள்தனம்

அரசியல் பங்கு படைத்தாய்
மரபுவழியில் சமர் செய்தாய்  

கரும்புலி கடமைசெய்தது
கடற்ப்புலி கோலோச்சியது
வான்புலி வானளாவியது
ஒன்றுபட்டு விடுதலைப்புலி
வீரம் பேசியது

மானம் காக்க
இனம் காக்க
அறம் நிற்க
மறம் உரைக்க
மாசற்ற மாவீரனாய்
தரணிக்கு தமிழனின்
அடையாளமாய்
சின்னமாய்
செயலாய்
எண்ணமாய்
எழுந்து நின்றாய்

இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற வீரனே
தமிழனை உலகுக்கு
அறிமுகப் படுத்தியவானே   
                  
தமிழன் என்றாய்
தனிநாடு வென்றாய்
ஈழம் அமைத்தாய்


நிகரில்லாதவரே
நெஞ்சை விட்டு நீங்காதவரே
துரோகம் உம்மை வீழ்த்தி விட்டதாய்
கொக்கரிக்கலாம்
நரிகளின் நயவஞ்சகம்
உம்மை மிஞ்சிவிட்டதாய்
நெஞ்சு புடைக்கலாம்

ஆனால் கடைசி உண்மைத் தமிழன்
ஒருவனாவது இருக்கும் வரை
உனக்கும் உமது கொள்கைக்கும்
மறைவென்பதே இல்லை


"புலிகள்" எங்கள் ராணுவம்
"பிரபாகரன்" எங்களுக்கு ஒரு மந்திரச்சொல்
"தமிழ் ஈழம்" எங்கள் தாரக மந்திரம்


தமிழீழ தாகம் இன்றுதான் தணியாத தாகம்

என்றுமே தணியாமல் இருக்கப் போவதில்லை
தணியும் வரை விடப்போவதும் இல்லை

   

Friday, November 25, 2011

நிலையை என்னச் சொல்ல?




நிலையை என்னச் சொல்ல?
தண்ணீர் கொடுக்க தரம்கெட்ட
நிலையை என்னச் சொல்ல?
உச்சநீதி மன்றத்தை உதாசினப்படுத்தும்
நிலையை என்னச் சொல்ல?
குறுவைச் சாகும்
நிலையை என்னச் சொல்ல?
முல்லை பெரியாறு முடக்கப்படும்
நிலையை என்னச் சொல்ல?
விளைநிலம் தரிசாகும்
நிலையை என்னச் சொல்ல?
விவசாயின் விதியின்
நிலையை என்னச் சொல்ல?
சோறுடைத்த பொன்னாடு!
நீரின்றி வாடும்
நிலையை என்னச் சொல்ல?
நான் தான் ஏது செய்ய?
கட்டுண்ட எனது கரங்கள்
கருகி வீழட்டும்.

----------------------------------------------------------------------------------------------------------------

இனியும் சொல்லாதீர்கள்....

நாம் ஓர் இனம்
நாம் ஓர் குலம்
என்று.....

அழிவை தந்துவிட்டு
கண்ணீர் அஞ்சலி
ஒரு கேடு

துக்கம் தந்துவிட்டு
மனத்துயரம் ஒரு கேடு

மதிகெட்ட மாந்தர்களே.........


படங்கள்: ன்றி கூகுள்

Monday, November 21, 2011

கி.மு................ கி.பி...


இது நான் எழுதும் முதல் புத்தக விமர்சானம். இதுவரை பல புத்தகங்களுக்கு விமர்சனம் எழுத முயன்றதுண்டு. ஆனால் அவைகளுக்கு இல்லாத அந்த முனைப்பு இந்த புத்தகத்தை பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று ஏற்ப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.


ஒரு நல்ல சித்திரக்காராகவும், விமர்சனகர்த்தாகவும் மட்டுமே எனக்கு தெரிந்திருந்த திரு.மதன் அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளராக எனக்கு தெரிந்தது "வந்தார்கள் வென்றார்கள்" என்னும் புத்தகத்திலிருந்துதான். அப்படி ஒரு சரித்திர புத்தகம் அது. உண்மையில் என்னை அந்த புத்தகம் கட்டிப் போட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதத் தோன்றாமல் போனதும் இந்த கி.மு கி.பி என்னும் புத்தகத்திற்கு எழுதத் தோன்றியதும் எனக்கு வியப்பாய்தான் இருக்கிறது.

இவரது புத்தகம் வார ஏடுகளில் தொடராய் வந்தபோது படிக்கமுடியாமல் போனது வருத்தம் தந்தாலும், இப்பொழுது முழு புத்தகமாய் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே!

கிமு கிபி:

இயற்கையின் அற்ப்புத படைப்பு இந்த மனிதன். ஆனால் இந்த மனிதனால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியாத விசயம் இந்த இயற்கைத்தான். அதுதான் இவனை உருவாக்கியது, அதுதான் இவனை கட்டுப்படுத்தியும் வைத்திருக்கிறது. அந்த இயற்கையை மட்டும் அவனால் வெல்லமுடியாது என்பது இன்றுவரை இருந்துவரும் நிதர்சன உண்மை.

இப்படி பட்ட ஒரு முடிச்சின் ஆரம்பப் புள்ளியில் (மனிதனின் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே) தொடங்குகிறது இந்த புத்தகத்தின் முதல் பாகம். முன்னுரையிலிருந்து இறுதி பக்கம் வரை ஒரு அனாசிய ஆர்வத்தை உண்டாக்குகிறது இந்த புத்தகம்.

ஆதிமனிதனின் முதல் தோன்றல் பெண் என்பதும் அவளது காலடித்தடம் கிடைக்கப்பெற்றது என்று அறியும்போது பற்றிக் கொள்கிறது ஆர்வப் பொறி பகீர் என்று.

முதல் ஆதி மனிதர்களில் பலவகையான மனிதர்கள் இருந்தார்கள் என்றும் அவை எல்லாம் அழிந்து மீதம் இருந்த இரண்டே இனம் நியண்டர்தால் மற்றும் க்ரோமேக்னன் மட்டும்தான். இதில் க்ரோமேக்னன் என்னும் இன்றைய மனிதர்களாகிய நம்மால் அழிக்கப்பட்டது நியண்டர்தால் இனம் என்று வரும்பொழுது எரிகிற ஆர்வத்தீயில் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிறது.

இப்படி பல வரலாற்று நிகழ்வுகள் அடுத்தடுத்து அடுக்கிவைத்து ஆச்சர்யத்தின் உச்சிகே நம்மை கொண்டுபோகிறார் மதன்.

இன்றைய ஆப்பிரிக்காவின் (அன்று ஆப்பிர்க்கா என்று ஒரு கண்டம் இல்லாமல் இருந்தபோது) மத்தியில் உருவாகிய இனம் உலகம் முழுதும் பறந்து விரிந்தபின்பு கண்டங்கள் பிரிந்ததும் நிரந்தரமாய் தங்கிய மனிதனின் நாகரீக வளர்ச்சி
அபரிமிதமாய் கற்பனைக்கு எட்டாத வண்ணம் இருக்கிறது என்று நிருபிக்கிறது இந்த புத்தகம்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் உருவாகிய நாகரீகம், அவற்றின் வளமை, அழிவு என்றும் முக்கியமாக இந்திய நாகரீகத்தை பற்றி கூறும் பொழுதும் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்கச் செய்கிறது.

பாரசீகம், ஏதென்ஸ், ரோமானியம், எகிப்த், பாபிலோன், இந்தியா என்று அனைத்து நாகரீக வரலாற்று பதிவுகளையும் முக்கிய கட்டங்களையும் சுவை குன்றாமல் காட்டிச் செல்கிறார். அதிலும் குறிப்பாக முக்கிய நிகழ்வுகளுக்கான சாட்சியங்களை, அடையாளங்களை குறிப்பிடுவதும், புகைப்படங்கள் இருப்பதும் ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் அதிகரிக்கவே செய்கிறது.

குறிப்பாக இந்தியாவை பற்றி அதுவும், ஆரிய கலாச்சரமதான் இந்தியாவின் முன்னோடி என்னும் கூற்றை உடைக்கும் அந்த வரலாறும், ஆதாரங்களும் அதை அவர் சொல்லும் விதமும் உண்மையில் அடக்கமுடியாத ஒரு உணர்வை வெளிப்படவே செய்கிறது.

அதில் உச்சகட்டமாக சிந்து நாகரீகத்தின் மொழி பண்டைய தமிழ் என்றும் அதை நிச்சயமாக கூறமுடியாவிட்டாலும் இதுவரையில் ஆராய்ச்சி சாத்திய கூறுகள் அனைத்தும் அவ்வாறே உள்ளன என்று அறியும்பொழுது பெருமைபடாமல் இருக்க முடியவில்லை.

அனைத்து நாகரீக வளர்ச்சி என்று பொதுவாக இல்லாமல் கலை, மொழி, இலக்கியம், சட்டம் அரசியல், போர் என்று அனைத்தும் தனித்தனியாக முக்கிய நிகழ்வுகளாக பிரித்து கொடுத்திருப்பது அருமை.

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்ட்டாட்டில், அலக்ஸ்சான்டர், சாணக்கியர், சந்திரகுப்தர், அசோகர், "தெற்கே பண்டியநாடும், சோழநாடும் சுதந்திரநாடுகள்" என்ற அசோகரின் குறிப்பு, தமிழர்களுக்கும், யவனர்கள் என்று தமிழர்களால் அழைக்கப் பட்ட கிரேக்கர்களுக்கும் இருந்த தொடர்புடன், புதிய மில்லினிய தொடக்க காலகட்டத்தோடு புத்தகத்தை முடிக்கிறார்.

மொத்தத்தில் படித்து முடித்தவுடன் தலை முழுதும் பல செய்திகள் ஏறிவிட்டதுபோல் ஓர் உணர்வு. சரித்திர புத்தகத்தை படிக்கும்போது இப்படி பட்ட உணர்வு வரும் என்றால் அது ஆசிரியரின் சுவை குன்றாமல் கொண்டுசெல்லும் திறமையினால் மட்டுமே.

இப்படி ஒரு புத்தகம் தந்த திரு.மதன் அவர்களுக்கு நன்றி.

Saturday, November 19, 2011

முன்னபோனா கடிக்கும் பின்னபோனா உதைக்கும்......(ஜனநாயகம்)


ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி கருணாநிதி தப்பு பண்ணாருன்னு இந்த அம்மாவை உக்கார வச்சு, அவர புத்திசாலித்தனமா தண்டிச்சுட்டதா நெனச்சோம், அப்புறம் அந்த அம்மா தப்பு பண்ண அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சு (கந்தலான அப்புறம் தான்) கருணாநிதிய உக்கார வச்சு பெரும பட்டுகிட்டோம். அடுத்த அஞ்சுவருசம் (ரொம்ப இல்ல) கழிச்சு மறுபடியும் அந்த அம்மா அடுத்து அஞ்சு வருஷம், அப்புறம் மறுபடியும் அவரு, இப்போ மறுபடியும் அம்மா அடுத்த அஞ்சு வருஷம்... (என்னால முடியல...)


இத நாம நம்மோட புத்திசாலிதனம்னும், தப்புபன்னவங்கள தண்டிச்சுட்டதாவும் சொல்றோம், நினைக்கிறோம். உண்மையிலேயே இங்க யாரு புத்திசாலி, யாரு முட்டாளு? (அது தெரிஞ்சாதான் நம்ப நாடு எப்பவோ முன்னேறி இருக்குமே!)

இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன் அவரு கொள்ளையடிச்சாரு, இந்த அம்மா விலை ஏத்திட்டாங்கன்னு கூப்பாடு போடுறோமே, நமக்கு என்ன அருகதை இருக்கு அதை கேட்க?


இலவசம் கொடுத்துட்டு இப்போ விலைய ஏத்திட்டாங்கன்னு சொன்னா உங்கள யாரு இலவசங்கள வாங்க சொன்னது? டிவி, மிக்சி, மாடு, சைக்கிளு, லேப்ட்டாப்புன்னு வாங்கும்போது வலிக்காம வாங்குனோமே இப்போ இந்த விலைவாசியவும் இலவசமா குடுத்துருக்காங்க அதே சந்தோசத்தோட வாங்கிக்க வேண்டித்தானே.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே என் வலையில் "யாரு அதிக இலவசம் தராங்க..." என்று பதிவிட்டிருந்தேன், அதில் இருப்பவை உண்மைதானே, பிறகு நமக்கு ஏது அருகதை, அரசியல் வாதிகளையும், அரசாங்கத்தையும் குறைசொல்ல?

நம்மில் எத்தனை பேர் உண்மையாக இருக்கிறோம்? கருப்புப்பணம் பதுக்காமல் முறையாய் வரி செலுத்துகிறோம், வாங்கும் நிலத்திற்கு உண்மையான மதிப்பில் பத்திரம் பதிவு செய்கிறோம், கோடி... கோடியாய் இருந்தால்தான் கருப்பு பணமா?

நமது வீட்டில் வந்து மீட்டர் அளவை பார்க்காமல் போனமாதம் கட்டிய தொகையை மின்சார வாரியம் வசூளித்தபோது எத்தனை பேர் நாம் உண்மையான தொகையை கட்டினோம். நம்மில் எத்தனை பேர் லஞ்சம் வாங்காமல், கொடுக்காமல் இருக்கிறோம்?

இதையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் வாதிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம் (சிக்கி விட்டான் சீதகாதி...).

இந்த அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை, அவர்களும் இந்த மக்களில் இருந்து வந்தவர்கள்தான், நீங்களும் நானும்தான் அது. அடுத்தவன் காசு ஐந்துருபாய் உழைக்காமல் கிடக்கும் என்றால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுகிறோம் நம்மிடம் கோடிக்கணக்கில் சிக்கினால் விடுவோமா என்ன? அவன் தான் அரசியல்வாதி, நமக்கு என்றால் முக்கியம் அடுத்தவனுக்கு என்றால் அலச்சியம் என்று இருக்கும் நாம் தான் அந்த அரசாங்க அரசாங்க அதிகாரி.

அவரவர் கடமையை நாம் ஒழுங்காக செய்வதில்லை, உலகத்தில் எங்காவது இந்தியனை அசிங்கப் படுத்தினால், அவனை யார் அங்கு போகசொன்னது? என்று கேட்கிறோம், இந்தியாவில் தமிழனை அசிங்கப் படுத்தினால் நாம் இந்தியன் என்கிறோம்? சென்னையில் பிரச்சனை என்றால் நான் கன்னியாகுமரி எனக்கென்ன? என்கிறோம் கன்னியாகுமரியில் பிரச்சனை என்றால் நான் சென்னை அதனால் எனக்கென்ன? என்று சொல்கிறோம். இன்னும் பக்கத்துக்கு ஊர், பக்கத்து தெரு, பக்கத்துவீடு அதனால் எனக்கென்ன? எனக்கென்ன? (அஜித் போல...) என்று சொல்லிக்கொண்டே போனால் உங்களுக்கு என்று யார் வருவார்கள்? ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு வாழ்கிறோம் பிறகு நமக்கென தகுதி இருக்கிறது?

எவனாவது சாகட்டும் நான் வாழ்ந்தால் போதும் என்று நினைத்தால், நம்மை சாகவிட்டு அவன் வாழ நினைக்க மாட்டனா? சுயநலமாய் வாழ்ந்து வாழ்ந்து என்னத்தைதான் சாதித்தோம் என்றுதான் தெரியவில்லை? நம்நாடு தானே அதை சுத்தமாக வைத்திருப்போம் என்று நினைப்பதில்லை? பிறகு அவன் எப்படி நினைப்பான் நம் மக்கள் பணம்தானே திருடாமல் இருப்போம் என்று?

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது இதுதான், ஜனநாயகம், சுதந்திர வாழ்க்கை என்பது இந்த விதியில் தான் இயங்குகிறது.

இந்த ஜனநாயம், மக்களாட்சி என்பதெல்லாம் முன்னே போனால் கடிக்கும், பின்னே போனால் உதைக்கும். இல்லையென்றால் அதன் கூடவே சமமாய் செல்லவேண்டும் அப்போதுதான் சுகமாய் சவாரி செய்யலாம்.


படங்கள் அனைத்தும் கூகிள் உதவி: நன்றி

Thursday, November 17, 2011

பிழைத்துப்போ தமிழே!


பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!

உன்னை அழிக்க ஆயிரம் அரிவாள்!

அதனை எவர் இங்கே அறிவார்!

ஆயிரம் ஆண்டுகள் கடந்தவள் நீ!

காவிரிக் கரையில் வளர்ந்தவள் நீ!

உன்னை அழிக்க வந்தவர் எவரும்!

பிழைத்ததில்லை என்பதை உலகம் அறியும்!

பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!

இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
தழைத்துப்போ!

நம்மினத்தை அழைத்துப்போ!

Tuesday, November 15, 2011

தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்குமா?

தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்குமா?

இதுவரை அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ் இனத்திற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராகவே கருத்துக்களை பிரசுரித்துவந்த தினமலர், எல்லை வரம்பையும் மீறி, அநாகரீகமாகவும், தமிழ் மக்களின் அனைவரது மனமும் புண்படும் அளவிற்கு ஒரு கேவலமான செய்தியை பதித்து வக்கிரத்தின் எல்லையைத் தாண்டி இருக்கும் இந்த தினமலர், இன்று ஒட்டுமொத்த தமிழரின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளது.


//இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.//

//கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?//

//கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக் குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமான மில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. //


ஒரு பெண்ணின் கற்பழிப்பை விளம்பரப் படுத்தியதோடு இல்லாமல், அந்த பிரச்சனையை தமிழ் உணர்வாளர்களின், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டத்தோடு கலந்து கேவளப்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ், மலையாள மக்களிடையே பிரிவினை ஏற்ப்படுத்தும் விதத்தில் வரிகளை சேர்த்து, தமிழ்நாடு மற்றும் கேரள மக்களிடையே கலவரத்தை தூண்ட முறச்சி செய்துள்ளது. இது நாட்டின் முதன்மை பத்திரிகை இவாறு செய்திருப்பதால், இந்திய இறையாண்மைக்கு எதிராக இது பிரசுரிக்கப் பட்டிருப்பதாலும், பத்திரிக்கையை இந்திய அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்

ஒரு பெண்ணின் அபலத்தை பயன்படுத்தி விளம்பரம் தேட முயன்றதற்க்காகவும்

சாதி பூசலை தூண்ட முயற்சி செய்ததற்க்கும்

தமிழ் மக்களின் உணர்வை கேவலப் படுத்தியதற்க்காகவும்

தமிழர் போராட்டத்தை இழிவு படுத்தியதற்க்காகவும்

தமிழர் மலயாளி என்னும் பிரிவினையை தூண்ட முயற்சி செய்ததற்கும்

நடுநிலை தவறி, பத்திரிகை தர்மத்தை மீறியதர்க்காகவும்

மாற்று திறனாளிகளை கிண்டல் செய்ததற்காகவும்

தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இந்திய அரசாங்கம் இதை விசாரித்து இந்த பத்திரிக்கையை தடை செய்ய வேண்டும்.

Monday, November 14, 2011

செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் (தின மலம்)

இன்று "சிறப்பு நிருபர்" என்ற பெயரில் தினமலரில் வெளியாகியிருக்கும் "செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?" என்ற தலைப்பில் ஒரு கற்பழிப்பு வழக்கையும், மூவர் தூக்கு நிறைவேற்றப் படக்கூடாது என்பதற்க்கான ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டத்தையும் ஒப்பிட்டு கேவளப்படுத்தி மிகவும் கீழ்த்தனமாய் செய்தி வெளியிட்டுள்ளது

இதே பத்திரிகை சங்கரராமன் கொலை வழக்கையும், காஞ்சிபுர கோவில் பூசாரி காமலீலையின் வழக்கையும், காஞ்சி சங்கரச்சாரியர்களின் காமலீளையும் சொல்வதில் ஏன்?

அதற்காக நான் சில நாட்களுக்கு முன்பு எழுதிய இந்த பதிவை மீள்பதிவு செய்கிறேன்


செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் (தின மலம்)


ஒட்டுமொத்த தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் தமிழில் வெளிவரும் தின(மலம்)மலர் பத்திரிக்கையை எதிர்த்து குரல் கொடுப்போம். ஒவ்வொரு முறையும் காரி உமிழும்படி செய்தி பத்திதால் வன்மையாகவும் கேவலமாகவும் கண்டிப்போம்.

எந்த ஒரு பார்ப்பனர் நடத்தும் பத்திரிக்கையை தமிழ்நாட்டில் மதிப்பில்லாமல் ஆக்குவோம். நம்நாட்டில் இருந்துகொண்டு நம்மோடு வாழ்ந்துகொண்டு, நம்மை அண்டி பிழைத்துக்கொண்டு நம்மையே ஆள, காலில் போட்டு மிதித்து நசுக்க முயலும் அந்த வந்தேறி கும்பலுக்கு சரியான படம் கற்ப்பிப்போம்.

உச்சநீதிமன்றமே மரண தண்டனைக்கு தடை விதித்த தவறு என்று உச்சநீதி மன்றத்தை அவமதிப்பு செய்வதோடு மட்டும் இல்லாமல், அவர்களை கொல்லத்துடிக்கும் இந்த பார்ப்பன நாளிதழ் ஒவ்வொரு முறையும் தீவிர வாதிகளை முன்னிறுத்தி செய்தி வெளியிடுவதும்.

பெரியாரைப் பற்றி தவறாக செய்தி வெளியிடுவதும், ஆத்திகம் என்னும் பெயராலும், விடையாட்டு, தொழில் வர்த்தகம், திரைத்துறை என்று எந்த துறையாய் இருந்தாலும் திறமை இருந்தாலும் பார்ப்பனர் அல்லாதவரை பின்னுக்கு தள்ளியும், திறமையே இல்லாத பார்ப்பனராய் இருந்தாலும் அவர்களை முன்னிறுத்தி புகழ்வதும்,

பார்ப்பனர்கள் பற்றிய தவறான செய்திகளை மூடி மறைப்பதும், பார்ப்பனர் அல்லாதவர் பற்றிய புரளி செய்திகளை ஊத்தி பெரிதாக்குவதும் இந்த புல்லுருவி பத்திரிக்கையின் தலையாய வேலை.

தமிழையும், தமிழனையும், தமிழ்ப் பண்பாடு கலாச்சாரத்தை கேவலப் படுத்துவதும். பிறநாட்டு கலாச்சார மோகத்தை ஊக்குவிப்பதும் முழுநேர பணியாகவும் செய்து வருகிறது.

தூக்கு தண்டனையை குறைக்க கூறி தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை குறை சொல்லாமல் இருப்பதும். ஆனால் தூக்கு தண்டனை நிறைவேற்ற சதிவேலை மிக்க செய்திகளை பதிப்பதும். பெரியாரப் பற்றி இழிவு செய்தியை மக்கள் மனதில் உருவாக்குவதும். மோடி, அத்வானி போன்ற திருட்டு கும்பல் செய்யும் நாடகத்திற்கு கூட்டம் அலை மோதியது, அதரவு பெருகுகிறது என்று புரளி செய்தி சொல்லவும்,

பார்ப்பனர் அனைவரும் திறமையானவர்கள், நல்லவர்கள் என்றும் தூய தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் திறமை இல்லாதவர்கள் போன்று ஒரு மாயத்திரையை செய்வதும் இதே பத்திரிக்கைதான்.


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மோடியை விமர்சித்தால் இந்த பத்திரிகை ஏன் அவரை விமசிக்கிறது? நியாயமான பத்திரிகை என்றால் பிஜேபி யை விமர்சித்தால் இந்த பத்திரிகை அவர்களை எதிர்ப்பது ஏன்? திமுக ஆட்சியில் இலவசம் கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள் என்று கூப்பாடு போட்ட இவர்கள் இப்போது ஜெயலலிதா கொடுக்கும்போது அதை கண்டிக்காமல் தலைப்பு செய்தியாகவும், ஜெயலலிதாவை யாராவது புகழ்ந்தால் அதை முக்கிய செய்தியாகவும் வெளியிடுவது ஏன்? உண்மையின் உரைகல் என்று போட்டுவிட்டு பொய்யாய் புளிகித்தல்லும் புளுகு மூட்டை பத்திரிகை இது.


பாம்பையும் பார்ப்பானையும் ஒரே நேரத்தில் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்றார் பெரியார். முதலில் நாம் அடிக்க வேண்டியது பாம்பாய் நெளியும் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளைத்தான்.

உண்மையில் இது தினமலர் இல்லை தினமலம் தான். தூக்கி எறியுங்கள் இந்த குப்பையை. இனி இலவசமாய் கொடுத்தாலும் இந்தப் பத்திர்க்கையை யாரும் வாங்காதிர்கள். வேண்டுமானால் குழந்தைகள் உள்ள வீட்டில் வாங்குகள் கழுவி விடாமல் மலம் துடைக்க பயன்படுத்தலாம் இந்த தின(மலம்)மலரை.

Friday, November 11, 2011

விடுதலை வேட்கை….. (சிறுகதை)

சாலையெங்கும் மக்கள் வெள்ளம், ஆங்காங்கே சிறு சிறு சலசலப்பு, சில ஆரவாரம். சிறைச்சாலை வாயிலில் இருந்து அரண்மனை வாசல் வரை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஊர்ந்துச் சென்றது ஒரு மாட்டுவண்டி அனைவரது கண்களும் அவன்மேல்.

வண்டியின் மத்தியில் நடப்பட்டக் கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் ஓர் இளைஞன், தினவெடுத்த தோள்கள், அகன்ற மார்பு, அழகிய முகம், முறுக்கிய மீசை, உடலெங்கும் காயத்தழும்புகள் அவன் வீரத்தைப் பறைசாற்ற, கோபத்தால் சிவந்த கண்களின் வெறித்தப்பர்வை மட்டும் அரண்மனையை நோக்கியபடியே.

விசாரணை மன்றம் முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, அரசன் பலபீமனும், முதல் மந்திரியாரும் ஆலோசனையில் இருக்க, பிற மந்திரிகளும் மக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டதால் மன்றமெங்கும் இளமாறன், இளமாறன் என்ற சலசலப்பு நிறைந்தே இருந்தது.

“இழுத்துவரச் சொல்லுங்கள் இளமாறனை”

என்ற முதல் மந்திரியரின் குரல் அனைவரது பேச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க எங்கும் அமைதி.

இழுத்துவரப்பட்டான் இளமாறன், அவன்தான் முன்பு கம்பத்துடன் கட்டப்பட்டு, வீதி ஊர்வலம் கொணரப் பட்டவன், இதோ இங்கே இரும்புச் சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்படுபவனும் அவன்தான், அதே இளமாறன் தான்.

நிசப்த்தம், எங்கும் நிசப்த்தம் அனைவரது முகமும் ஒரே நிலையில், அனைவரது பார்வையும் அவன்மீதே,

“மன்னருக்கு மரியாதையை செய்”

என்ற மந்திரியின் குரல் இம்முறை அமைதியைக் குலைத்தது
இதழோரம் ஓர் அலட்சியப் புன்னகையை உதிரவிட்டான் இளமாறன்.

அதைக் கண்டும் காணாதது போல் பேசினான் மன்னன் பலபீமன்

"நீ ஏன் இப்படி இங்கு நிறுத்தப்பட்டுல்லாய், தெரியுமா உனக்கு?"

"அதைத் தாங்களே சொல்லிவிடலாமே!" என்றான் இளமாறன்

“கலகம் செய்தாய், அரசுக்கு எதிராக மக்களை தூண்டினாய், புரட்சி செய்ய முயன்றாய்”

என்று இளமாறன் மீது குற்றங்களை அடிக்கினார் முதல் மந்திரி

“என்ன கலகம் செய்தேன்?”

“வரி கொடுக்க முடியாது என்றாய்”

“எம்மினத்தவர் மட்டும் மும்மடங்கு வரி கொடுக்க இயலாது என்றேன்”

"உங்கள் மொழியை மட்டும் ஆட்சி மொழியாக அறிவிக்கச் சொன்னாய்"

"எங்கள் மொழியையும் அறிவிக்கச் சொன்னேன், எங்கள் மொழியை மட்டுமல்ல"

"மன்னருக்கு எதிராக மக்களைத் தூண்டினாய்"

"மக்களைத் தூண்டவில்லை, முறையிட்டேன். மக்களுக்காகத்தான் மன்னன் அந்த மன்னனே உதாசீனப் படுத்தும் பொழுது, மக்களிடம்தான் செல்ல முடியும், அவர்களிடம்தான் முறையிட முடியும்"

"நீ என்ன காரணங்கள் கூறினாலும் சரி உனக்கு தண்டனை உறுதி"

“மரணத்தைப் பற்றி கவலை கொள்ளவில்லை நான், என் கவலையெல்லாம், இந்த நாட்டைப் பற்றித்தான், நட்டுமக்களைப் பற்றித்தான், கேள்விக் குறியாய் இருக்கும் அவர்கள் எதிர்காலம் பற்றித்தான். இனி என்ன? நான் இப்பொழதும் கேட்கிறேன்? கூடியிருக்கும் மக்களே, சகோதரர்களே, நாம் அனைவரும் ஒன்றுதான் மொழியால் இனத்தால் வேருபட்டபோதும் நாமும் மக்கள்தான், உழைக்கும் மக்களின் வர்க்கம் ஒன்றுதான், உழைப்பை உறிஞ்சும்போது வரும் வலி ஒன்றுதான். இப்பொழுது கூறுங்கள் நான் கேட்பது தவறா?, உரிமைகள் மறுக்கப்படுவது அடுக்குமா?, மக்களை அடிமைப் படுத்துவது முறையா? இனத்தை அழிக்க நினைப்பது செயலா? நீங்கள் கூறுங்கள், தீர்ப்பை நீங்களே கூறுங்கள், இப்பொழுதே கூறுங்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென்று எண்ணி உயிர்த்துரக்கிறேன் நான்"

"வேண்டாம் வேண்டாம்" என்றது சில குரல்

"இளமாறனை விடுதலை செய்"

"இளமாறன் கோரிக்கைகளை நிறைவேற்று"

"இளமாறனை விடுதலை செய்,
இளமாறனை விடுதலை செய்,
இளமாறனை விடுதலை செய்,....................."
"விடுதலை, விடுதலை........................ "

எங்கும் எழுந்த அந்த ஒலி மன்றம் முழுதும் ஒலித்தது, அரண்மனை முழுதும் ஒலித்தது

இந்த ஒலிகளின் நடுவே, திடீர் என்று கதவுகள் திறக்கப்படும் சப்தம் கேட்க்கவே திடுக்கிட்டு விழித்தான் இளமாறன்.

கருங்கல் உத்திரம், குறைந்த வெளிச்சம் நான் இன்னும் சிறைச்சாலையில்தான் இருக்கிறேன், அவையனைத்தும் கனவா?

என்று இளமாறன் நினைக்கையில் மீண்டும் கதவுகள் திறக்கப்படும் சப்தம்

இதோ வந்துவிட்டனர் நீதிமன்றம் அழைத்துச்செல்ல இல்லை இல்லை விசாரணை மன்றம், நீதி கிடைத்தால்தானே நீதி மன்றம்?.

இளமாறன் சிறைக்குள் நுழைந்த வீரர்களில் ஒருவன்

"இம் எழுந்திரு செல்லலாம்" என்று கட்டளையிட்டான்.

எழுந்த நின்ற இளமாறன் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, கைகளில் விலங்குகளால் பூட்டப்பட்டான். இறுதியாக ஒருவன் அவன் கண்களைக் கட்டினான்.

"எதற்கு கண்களை கட்டுகிறாய்?" என்றான் இளமாறன்

"மன்னர் உத்தரவு" என்றான் இளமாறன் கண்களைக் கட்டியவன்.

“நான் கண்ட கனவு நினைவாகப் போகிறது, எம்மினத்திற்கு விடுதலை வெகு தொலைவில் இல்லை, மக்களிடம் முறையிடப்போகிறேன் மக்கள் புரட்சி துளிர்க்கும், நான் நினைத்த முடிவுகள் கிடைக்கும், கண்கள் கட்டப்பட்டால் என்ன? மூடர்களே என் சிந்தனையை கட்டிவிட முடியாதே?, கரங்கள் கட்டப்பட்டால் என்ன? நெஞ்சின் உரம் கட்டுப்பட்டு விடாதே?, இளமாறன் யாரென்று அறியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும், என்னை இதுவரை தெரியாத மக்கள் தெரிந்து கொள்ளட்டும், என் புரட்ச்சியை புரியாத இந்த அரசு புரிந்து கொள்ளட்டும்”

என்று அவர்களுடன் நடக்கலானான். அவன் சிந்தை முழுதும் விசாரணை மன்றம், பலபீமன், முதல் மந்திரி, மக்கள் என்றே சுழன்றது.

"நில்" என்றது ஒரு குரல் திடீர் என்று

"ஏன்?" என்றான் இளமாறன், பதிலேதும் இல்லை.

இளமாறன் கண்கட்டு அவிழ்க்கப் பட்டது,

கண்களை மெல்லத் திறந்தான், அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

நீதி மன்றமும் இல்லை, மக்கள் கூட்டமும் இல்லை, மன்னரும் இல்லை, மந்திரியுமில்லை அவன் நின்றது கொலைக்களம்

"உனக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டுவிட்டது
மரியாதையாக மண்டியிடு" என்றான் ஒருவன்

பதறினான் இளமாறன், தவித்தான், துடித்தான்

"அநியாயம், அநீதி அநீதி விசாரணை இல்லாமல் தண்டனையா? கொடுமை, கொடுமை, கொடுமையிலும் கொடுமை......."

அவன் முடிக்கும் முன் அவன் உயிரைக் குடித்தது
ஒரு கொடியவனின் வாள் முனை. மெல்ல மெல்ல அடங்கியது அவன் உயிர் மட்டுமல்ல, அவன் கொண்ட சிந்தனையும், விடுதலையின் வேட்கையும் தான்.