Saturday, July 30, 2011

ஒரு மிருகம்...

ஆடை அணிந்து வலம் வருகிறேன்
அழகாய் இருக்க முயல்கிறேன்

மொழிகளில் வல்லமை காண்கிறேன்
பிழை என்கிறேன்
நிறை என்கிறேன்

இறக்கம் கொள்கிறேன்
வார்த்தை வடிக்கிறேன்
கதை கவிதை புணைகிறேன்

இசை இசைக்கிறேன்
பா படிக்கிறேன்
தூரிகை தொடுகிறேன்
ரசிக்கிறேன்
சிரிக்கிறேன்
மறக்கிறேன்
நினைக்கிறேன்

பண்பாடு காண்கிறேன்
பதவி ஏற்கிறேன்
பணிவிடை செய்கிறேன்

நன்றி
கருணை
காதல்
அன்பு
பாசம்
நேசம்

என்று பலவாறு
வேறுபடுத்த முயன்றாலும்

உண்மை சுடுகிறது
மனிதன் ஒரு மிருகம்
என்று உணரும் போது...

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய