Saturday, October 2, 2010

கிரகணம்...

எனக்குப் பின்னல் இருந்து கொண்டு
உன்னுள் நான் என்கிறாய்
விலகும் போதுதான் தெரிகிறது
உன்னால்தான் நான் என்று

உன்னுடன் இருக்கும் பொழுதான்
நான் ஒளிர்வதாய் உணர்கிறேன்
என்னை விட்டு நீ விலகினால்
சிறிது சிறுதாய் சிதறுகிறேன்

உன்னோடு நான் உறவாட
விண்ணோடு கண்களை
நம்மோடு உலவவிட்டால்
அந்தோ பரிதாபம்
அவர்களின் பார்வை தான்

Friday, October 1, 2010

உயிரம்புகள்...

ஒவ்வொரு முறையும் தாக்கப்படுகிறேன்

மிகமிகச் சரியாக மிகத்துல்லியமாக

தாக்கப்படும் ஒவ்வொருமுறையும்

வீழ்ச்சி காண்கிறேன் ரம்மியமாக

தாக்கிய அம்புகுவியல் மேல் நின்று

எண்ண முயல்கிறேன் அம்புகளை அல்ல

வீழ்ச்சிகளை மட்டும் தான்

சில அம்புகள் நீளமானவை

சில அம்புகள் அகலமானவை

சில கூரானவை, பல நேரானவை

மழுங்கியது சில, ஒடிந்தது சில

குருதிக்கரையுடன் சில அம்புகள்

பலரை தாக்கிய அடையாளம் தாங்கி

இவையணைத்தும் என்னைத் தாக்கிய

உயிரம்புகள்...............

Wednesday, September 29, 2010

காகிதம்

வெண்மையாய் இருந்த வெற்றுக் காகிதம்

ஆணிகளால் அரையப் பட்டிருந்தாலும்

அமைதி காத்தது அழகாகவே

தூரிகை துவலத்துவல நிறமேறியது

பச்சை வர்ணம் பளிச்சிட்டது

சிவப்பு வர்ணம் ஆங்காங்கே சிதறியது

நீல வர்ணம் நீண்டது

மஞ்சள் வர்ணம் மருகியது

கருப்பு வர்ணம் கனமின்றி பெருகியது

அங்கும் இங்கும் வர்ணக்கலவை

பெயரிட இயலா புதுப்புது வர்ணம்

காகிதத்தை காதலன் போல்

தொட்டு முடித்தது தூரிகை

அழகாய்த்தான் இருந்தது ஓவியம்

தனித்தன்மை இழந்தது காகிதம்

Monday, September 27, 2010

நிரந்தரமாய்.......................

தொலைந்து போன நித்திரை
எங்கோ தொலைந்துபோன என் நித்திரை
வலியவந்த வலிகளினால்
கலைந்துபோன நித்திரை
உழைப்புக்காகக் கலைத்தேன்
ஊருக்காகக் கலைத்தேன்
உறவுக்காகக் கலைத்தேன்
எங்கோ அதனை தொலைத்தேன்
கண்டடையும் முன்பு காலம் வந்தது
நித்திரை ஏற்க்க நிரந்தரமாய்

-------------------------------------------------------------
அவள் தான்
அவளே தான்

நினைவைப் பறித்துவிட்டு
நிதர்சமாய் சிரிக்கிறாள்
உணர்வை விதைத்தவள்
அறுவடைக்கு மறுக்கிறாள்

என்று அடிமை நான்
அவளின் அணைப்பிற்கு
இன்றும் குழந்தை நான்
அவளின் கரத்திற்கு

என்னைத் தாலாட்டி
பாராட்டி
சீராட்டி அமுதூட்டும் அன்னை
என் அன்னை
அவள் என் தமிழன்னை

Sunday, September 5, 2010

எங்கோ...........

கனவுகள்

ஆசைகள்

லட்சியம்

கொள்கை

பாசம்

நட்பு

வேட்க்கை

காதல்

கருணை

அன்பு

இவற்றோடு

எரியும்

மனிதனின் படம்

செய்தித்தாளில்

எங்கோ

குண்டு வெடிப்பாம்

Friday, September 3, 2010

முகமூடியோடு

மூடி மறைத்த முகத்தோடு ஓடுகிறேன்
என் உண்மை முகத்தைத் தேடி
என்றாவது கண்டுப்பிடித்து விடுவேன்
என்ற முகமூடியோடு
----------------------------------------
கடுவுளாய் இருக்க முயற்ச்சித்தேன்
கயவன் என்றது உலகம்
பதறி ஓடினேன்
பைத்தியக்காரன் என்றது அதே உலகம்
எதுவும் தடுக்கவில்லை என் கருணையை
காசைத்தவிர
-----------------------------------------
இறந்தகால நினைவுகளை இழுத்து
நிகழ்காலத்தை இறக்கச் செய்யும்
என் தனிமை
-----------------------------------------
எந்திர வாழ்க்கையில்
சிக்கி சிதையும் பூக்களாய்
மகிச்சி

Thursday, September 2, 2010

மருந்தாகியது...........

அறியா மனது
மண்டியிட்டக் கால்கள்

செய்யாத் தவறு
அடிவாங்கியக் கைகள்

கோணத மனம்
குட்டுப்பட்டத் தலை

காதல் வலி
கதறிய நெஞ்சம்

தோல்வியின் தொடர்ச்சி
கலங்கியக் கண்கள்

வெற்றியில் வீழ்ச்சி
ஏங்கிய நெஞ்சம்

உணர்வின் ஏக்கம்
கசிந்தக் கண்ணீர்

அழிந்த இனம்
நரக வேதனை

புரிந்த மனம்
பொய்யான சோதனை

மறைந்த உறவு
உறைந்த தாக்கம்

குலைந்த நட்பு
விளைந்த நோக்கம்

மருந்தாகியது காலம்

Wednesday, September 1, 2010

பிரபா………..

“ஏய்...பிரபா எங்க போய் தொலஞ்ச....முண்டம்?" என்று

கத்திக்கொண்டே வந்தாள் பங்கஜம்மாள். கோபம் தலைக்கேற வார்த்தையில் கொட்டினால். "பத்திர பண்டம் கழுவல.... எங்க போய் தொலஞ்ச எரும..." என்று வசை பாடினாள்.

"அம்மா?.... ஏம்மா சும்மா கத்துற? நான் தான் பிரபாவ மெடிக்கல் வரைக்கும் போ சொன்னேன்" என்றாள் சுவேதா.

சுவேதா பங்கஜம்மாளின் ஒரே மகள் செல்ல மகள். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள். சுவேதாவுக்கு பிரபா என்றாள் கொள்ளை பிரியம். பிரபா வெகுநாட்களாக அவர்கள் வீட்டில் வேலை செய்வதால் மட்டுமல்லாமல், சுவேதாவின் அப்பா வெளிநாட்டில் இருக்கிறார் வருசத்துக்கு ஒருமுறைதான் வருவர், ஒருமாதம் கூட தங்கமாட்டார், அம்மாவோ மூட்டுவலியால் பாதி நேரம் படுக்கைல்தான், உடன்பிறந்தவர்களும் கிடையாது.

அவள் அதிகநேரம் செலவிடுவது பிரபாவுடன்தான், அதனால் பிரபாவின் மேல் அவளுக்கு ஒரு தனி பிரியம்.

"வீட்டபாரு ஒரே தூசி.... ஒரு வேலைய ஒழுங்க செய்ரதில்லை மாசாமாசம் சம்பலம் மட்டும் முழுசா 900 ரூபா.... தெண்ட செலவு"
என்று பங்கஜம்மாள் கரித்துக் கொட்டும் பொழுதே வேர்க்க விருவிருக்க ஓடி வந்த பிரபாவை பார்த்து

"எவ்வளவு நேரம்? ஆடி அசஞ்சி வர......?" என்றாள்.

"இல்ல பெரியம்மா நம்ப தெரு மெடிக்கல் தொரக்கல, அதன் மெயின் ரோட்டு கடைக்கு போய் மருந்து வாங்கியாந்தேன்..... சின்னமாதான் எங்க இருந்தாலும் வாங்கியார சொன்னாங்க...." என்று பிரபா முடிப்பதற்குள்

"சரி..சரி... விட்டா கதையளப்ப போ போ போய் வேலைய பாரு...." என்றாள்.

பிரபா பதிலேதும் சொல்லாமல் சென்றபின் சுவேதா

"ஏம்மா? பிரபா பாவமில்ல இப்டி எரிஞ்சி விழுற" என்றவளிடம்

"நீ சும்மா இருடி, யார்யார எப்டி வைக்கனும்னு எனக்கு தெரியும். வேலக்காரங்கள இப்டித்தான் வைக்கனும் இல்லனா நம்ப தலைல ஏறி உக்காந்துக்குவாங்க" என்று சொல்லிக்கொண்டே சென்ற பங்கஜம்மாளை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் சுவேதா.

"என்னதான் இருந்தாலும் எல்லோருக்கும் மனசு என்று ஒன்று இருக்குமே?, வலி அனைவருக்கும் ஒன்று தானே? என்னை ஒத்த வயததுதான் பிரபாவும், பாவம். கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை, என்பது எவ்வளவு உண்மை"

என்று தனக்குத்தானே வருந்திக் கொண்டாள்.

“என்னடி ரொம்ப பாவப் படுறியோ?" என்று பங்கஜம்மாள் கேட்க

தன் சிந்தனையிலிருந்து திடீர் என்று விடுபட்டவள்

"இல்லமா, நேத்துக்கூட சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிகிட்டு காலெல்லாம் ஒரே காயம், பாவம்மா பிரபா." என்றால் ஒரு குழந்தை போல

"சூடான பத்தரத்த எறக்கி வக்கிம்போது துணிய வச்சிதான் ஏறக்கனும், இந்த அறிவுகூட இல்லமா வேல செஞ்சா இப்டிதான் ஆகும்"
என்று புத்தகத்தை பார்த்தபடி கூறியவள், ஒரு ராட்சசி போல் தெரிந்தால் சுவேதாவின் கண்களுக்கு.

இது எதைப் பற்றியும் கவலைபடாமல், காலால் இட்ட பணிகளை தலையால் முடித்துவிட்டு பிரபா கிளம்பும் போது மணி 6.15 ஆகிவிட்டது.

"பெரியம்மா…? நான்…. கெளம்பட்டுமா....?" என்று தயங்கிய பிரபாவின் முகத்தைக்கூட பார்க்காமல்

"இம்.., இம்.., நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு வந்துடு" என்றவளிடம் சரி என்று தலையாட்டிவிட்டு வந்த பிரபா வாசலை தாண்டும் பொழுது

"பிரபா ஒருநிமிஷம் நில்லு" என்றாள் சுவேதா

"என்ன சின்னம்மா ஏதாவது வாங்கியாரனுமா?"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம், இந்தா இத பிடி" என்று ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை பிரபாவின் கையில் திணித்தாள்.

"இல்லமா வேண்டாம், பெரியம்மாவுக்கு தெரிஞ்ச திட்டுவாங்க"
என்று நெளிந்த பிரபாவின் கையை விடாமல் பணத்தை திணித்தபடி

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது, அப்படி கேட்டாலும் நான் சொல்லிக்கிறேன், நீ காலுக்கு நல்ல மருந்தா வாங்கிப்போடு... " என்றாள்.

சுவேதாவின் பிடிவாதத்தால் பணத்தை வாங்கிக்கொண்ட பிரபா
"சரி நான் கெளம்பறேன் சின்னம்மா" என்று பிரபா நகர முயல

"பிரபா நான் சொன்னத யோசிச்சுப் பாத்தியா?" என்றாள் தலையை குனிந்து கொண்டே.

"சின்னம்மா நான் அன்னைக்கு சொன்னதான் இப்பவும் சொல்றேன், தயவு செஞ்சி புரிஞ்சுக்குங்க. நீங்க பணக்காரங்க நான் ஒரு ஏழ அதுவும் வயசுக்குவந்த தங்கச்சிக்கு ஒரு நல்ல துணி எடுத்துக் குடுக்ககூட வக்கில்லாத ஏழ, உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. எம்மேல உங்களுக்கு இருக்குறது காதலில்ல கருண, கருணையும் காதலையும் போட்டுக் கொழப்பிக்காதீங்க, அதுவுமில்லாம என்னால உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ண முடியாது. என்ன மன்னிச்சிடுங்க." என்று கையெடுத்து கும்பிட்டபடி திரும்பி நடந்தான் ஏழை பிரபாகரன்.

கலங்கிய கண்களுடன் பிரபாகரனை பார்த்தப்படியே சிலையாய் நின்றால் சுவேதா.

Monday, August 30, 2010

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்....

வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்க முடியாது, அதிலும் பிறரை கிண்டல் செய்வதிலும்(பார்ரா....), பிறர் கேலிக்கு ஆளாவதிலும்(இப்ப சொல்றியே இது கரெக்ட்....) ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும். என் நண்பன் ஒருவனுக்கு நான் தினமும் ஒரு பல்பு கொடுக்கவிடில் என் தலை சுக்குநூறாக சிதறிவிடும்(அவன் ஆயிரம் பல்பு குடுப்பான?), என்ன செய்வது நமக்கு வாய்த்த அடிமை அவன் ஒருவன்தான்.

எல்லாவற்றையும் மனதில் வைத்து எத்தனைநாள் திட்டம் போட்டானோ தெரியாது,
வழக்கம்போல் இன்றும் பல்பு கொடுக்கலாம் என்று

"மச்சான் பிசிய?" என்றேன்

"இல்ல ஏண்டா?" என்றவனிடம்

"கொஞ்சம் இங்க வா, ஒரு உதவி பண்ணுடா ரொம்ப முக்கியம்" என்றேன் மூன்று மேசைகள் தள்ளி அமர்ந்திருந்தவனை.

எனக்காக தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டு என்னிடம் வந்தவனை
"இல்ல மச்சி இந்த பேப்பரை இந்த குப்பைதொட்டியில போடணும், நீயே கொஞ்சம் போடேன்" என்று சொன்னேன் சிரிக்காமல் கையில் பேப்பருடன் என் அருகில் இருந்த குப்பைத் தொட்டியை சுட்டிக்காட்டியபடி.

அருகில் இருந்த அனைவரும் சிரிக்கும் முன், என்கையிலிருந்த பேப்பரை பிடுங்கி என்தலையில் போட்டுவிட்டு கூலாக சொன்னான் சண்டாளன் "மச்சா குப்பையில போட்டுட்டேன் டா" அப்பொழுது அனைவரின் சிரிப்பைவிட என் காதில் ஒலித்தது சந்தானத்தின் டயலாக் "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்".

Friday, August 27, 2010

நிலையை என்னச் சொல்ல?




நிலையை என்னச் சொல்ல?
தண்ணீர் கொடுக்க தரம்கெட்ட
நிலையை என்னச் சொல்ல?
உச்சநீதி மன்றத்தை உதாசினப்படுத்தும்
நிலையை என்னச் சொல்ல?
குறுவைச் சாகும்
நிலையை என்னச் சொல்ல?
முல்லை பெரியாறு முடக்கப்படும்
நிலையை என்னச் சொல்ல?
விளைநிலம் தரிசாகும்
நிலையை என்னச் சொல்ல?
விவசாயின் விதியின்
நிலையை என்னச் சொல்ல?
சோறுடைத்த பொன்னாடு!
நீரின்றி வாடும்
நிலையை என்னச் சொல்ல?
நான் தான் ஏது செய்ய?
கட்டுண்ட எனது கரங்கள்
கருகி வீழட்டும்.

வித்தானவைதான்..

வித்தானவைதான்..

ஒவ்வொரு வெற்றிக்கும்
உழைப்புகள் வித்தானவைதான்..

உழைப்பிற்கு கொண்ட
உறுதிகள் வித்தானவைதான்..

வெல்லும் உறுதிக்கு
நம்பிக்கைகள் வித்தானவைதான்..

இன்றே நம்பிக்கை வித்திடு
வெற்றியின் விளிம்பை தொட்டிடு........

இனியும் சொல்லாதீர்கள்....

இனியும் சொல்லாதீர்கள்....

நாம் ஓர் இனம்
நாம் ஓர் குலம்
என்று.....

அழிவை தந்துவிட்டு
கண்ணீர் அஞ்சலி
ஒரு கேடு

துக்கம் தந்துவிட்டு
மனத்துயரம் ஒரு கேடு

மதிகெட்ட மாந்தர்களே.........

Thursday, August 26, 2010

போடா போடா புண்ணாக்கு.....

மாதக்கடைசி கைல காசு இல்ல, கடைசியா இருந்த ஐம்பது ரூபாய்க்கும் டாப்-அப் பண்ணியாச்சு, டாப்-அப் ஆனா குறுஞ் செய்தியை தொடர்ந்து வந்தது ஒரு மிஸ்டு கால்,

அமுதா... காலிங்....
உடனே நான் கால் செய்ய "ஹலோ என்னப்பா?"

"டேய் நாளைக்கு ஆபீஸ் ஆடிட்டிங்.................
........................................................................
......................................................................"

"ஓகே bye bye"

(யுவர் பேலன்ஸ் - 39.00 ருபீஸ்)

இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........! "#@%$%#@#!"
மீதி 39.00 ரூபாய் இருக்கே என்று நினைத்த நேரத்தில் அடுத்த மிஸ்டு

கால் "ஷீலா கல்லிங்......"
நான் கால் செய்ய "என்ன ஷீலா?"
" இல்லடா சும்மாதான், நேத்து படத்துக்கு போறன்னு.....................................................
........................................................................
......................."

"இம் இம் bye bye "

(யுவர் பேலன்ஸ் - 22.00 ருபீஸ்)
ஆஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்பதற்குள் வந்தது அடுத்த மிஸ் கால்

"நிலா காலிங்...."

மீண்டும் நானே கால் செய்ய

"சொல்லு நிலா interview என்னாச்சு?"

"போடா! கம்பெனியா டா அது? கேள்வி கேட்கிறேன்னு கழுத்த அருத்துட்டான்"

"அப்டியா?"

" ஆமாண்டா, ....................................................
........................................................................
.........................................................................
........................................."

(யுவர் பேலன்ஸ் - 1.08 ருபீஸ்)

ஐயய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (அட மூதேவிங்கலா?)

ஆஹா! லதாவுக்கு ஆபீஸ் ஆடிட்டிங் டீடைல்ஸ் சொல்லனுமே, அவளுக்கு ஒரு மண்ணும் தெரியாதே!!!!!!!!!!!!!!!

சரி லதாவுக்கு மிஸ் கால் குடுக்கலாம்
பாடியது "போடா போடா புண்ணாக்கு.." கட் பண்ணிவிட்டு காத்திருந்தேன்..

லதாவிடம் இருந்து கால் வந்து
("லதா காலிங்.....")
??????????
??????????

"1 மிஸ்டு கால்" (போங்ங்ங்ங்ங்கடங்ககக........)

இப்போது நான் கால் பண்ணாமலே அந்த பாடல் ஒலித்தது

("போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.....")

Tuesday, August 24, 2010

வணக்கம்

வணக்கம்

அன்பு பிளாக்கர்கள் எல்லோருக்கும் பிளாக்கிக்கிறேன். (மன்னிக்கவும்) அன்பு நண்பர்கள் எல்லாரையும் வணங்கிக்கிறேன். என்னடா தொடங்கிய உடனே மன்னிப்பு கேட்கிறேன்னு நினைக்காதீங்க.

மன்னிக்க தெரிஞ்சவன் மனிதன்
மன்னிப்பு கேட்பவன் கடவுள்
(கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என்னபன்றது சிலவிசயங்கள மாத்தமுடியதுல்ல சரி விசயத்துக்கு வருவோம்)

இது எனது முதல்படி (அப்ப ரெண்டாவது படி இன்னொரு பிளாக்கான்னு கேட்கக்கூடாது), என்னுடைய (மொக்கைகளை) பதிவுகளை பெரிய மனதுடன் படித்து பின்னூட்டத்தில் பின்னியெடுத்து என்னை வாழ்வில் வளமடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றிங்கோ.................................