Saturday, July 30, 2011

நானே உவமையானேன்....

நானே உவமையானேன்
உணமைக்கும் தத்துவத்திற்கும்
இடையில் ஊசலாடும்
உவமை வாழ்க்கைக்கு

நானே உவமையானேன்
உயிர்விட்ட உடலாய்
பத்து கால்களில் ஊர்வலம்
போகும்போது

நானே உவமையானேன்
வெறுமையாய் வந்து
வெரும்கையாய் போகும்போதும்

நானே உவமையானேன்
உண்மை உணர்த்திப்போனேன்
உணர்ந்து கொண்டவர்
யாரென்றுதான் தெரியவில்லை

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய