Saturday, July 30, 2011

சில....

நண்பன்

இருப்பானென்றா இறுமாந்திருந்தேன்?
தாங்குவானென்றா தவித்திருந்தேன்?
நீங்குவானென்று நினைக்கவில்லையே
ஒரு கணப்பொழுதும் நான்!

---------------------------------------------------------------------
காதல்

இருந்துவிடுகிறேன் எப்பொழுதும்
உன் நினைவில் தூங்காமல்
பதிந்துவிடுகிறேன் என்மனதில்
உன் உருவம் நீங்காமல்
உதிர்ந்து விழுகிறேன் காதலில்
காய்ந்து போன சருகாக
நீ உயிர்ப்பிப்பாய் என்று இருக்குறேன்
இன்னும் உருவாக

-------------------------------------------------------------------
கல்லறைக்குள்

நாளையேனும் வருவாயா?
என்று கத்திருக்கிறேன்
என் கல்லறைக்குள்
இன்னும் என்னுயிர் உறங்காமல்

-------------------------------------------------------------------

ஆணவக்காரன்

இன்னுமிருக்கிறானென்பதை எரியூட்டி
இன்னுமா இருக்கிறான்? என்றுசெய்தால்
இருப்பவனும் இல்லாமல் போவானே!
என்று ஆகும் வழி செய்ய
ஆவலாய் அன்புடன்
சிரம் தாழ்த்தி
கரம் கூப்பி
வேண்டிக்கொள்கிறேன் வேந்தனை

--------------------------------------------------------------------

காரணம்

இதுதானோ?
என்றுணர
எழும்பி வரும்
கனைகள் அனைத்தும்
முரண்பட்டு
முரிந்துபோயின
முன்னில்லாமல்....

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய