Monday, July 11, 2011

மரண அவஸ்த்தை....

சமபந்தியாய் சமர்ப்பணம்
ஒரே நாளில் பலருக்கு
ஒரே பந்தியில்
அதே இலையில்
மீண்டும் மீண்டும்

பக்குவமில்லா பரிமாற்றங்கள்
ஈடுபாடில்லாத
கற்பனை கதகளி
அரங்கேறியது அமைதியாய்
பல ஊமை நாடகம்

வெறி ஒருபுறம்
வெறுமை ஒருபுறம்
புனிதம் மட்டும்
வாசல்புறமே

கலைந்தது சடுதியில்
அவிழ்ந்ததை மறந்து
தொலைந்தது கலாச்சாரம்
கண்ணியம் காற்றோடு

கருணையில்லை
கண்ணீரில்லை
வலியிருந்தபோதும்
வராத வருத்தம்

கைநீட்டி
காசு வாங்கும்
போதும் மட்டும்

மரண அவஸ்த்தை

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய