Monday, July 11, 2011

அன்னையே!!!

அழகாய் இருந்து
அமைதியாய் கிடந்து
மனதை ஆட்கொள்கிறாய்

சிலநேரம் ஆர்ப்பரித்து
அள்ளிக் கொ(ல்)ள்கிறாய்
நீயே நின் மக்களை

மரங்களைப் பெயர்த்தாய்
பரவாயில்லை

அனால் நீ அறுத்துக்கொண்ட
மொட்டுக்கள் எத்தனை?
பிய்த்துப்போன பூக்கள்
எத்தனை?
அள்ளிச்சென்ற பிஞ்சுகள்தான்
எத்தனை? எத்தனை?

எத்தனைக் கவிங்ஞ்னை அழித்தாயோ?
எத்தனை மா மனிதனை அழித்தாயோ?
எண்ணிச் சொல்ல இயலுமா?

உனக்குப் பசித்தால்
உன் பிள்ளைகளை நீயே
உட்க்கொள்வதா?

உன்னை அழகுபத்திக்கொள்ள
இத்தனை உயிர்களை
உருக்குவதா?

பிள்ளைகளின் இரத்தத்தில்
தாய் மின்னிக் கொள்வதா?

நீ புரண்டு படுத்து
எங்களை அழிவில் ஆழ்த்துவதா?

மலைகளை பெயர்த்துவிட்டு
பிணங்களை குவிக்கப் பார்க்கிறாய்

உன் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட
மண்டை ஓடுகளை தண்ணீரால்
தள்ளிவிட்டுப் பார்க்கிறாய்

நீங்களே ஏன்?
நானிருக்கையில் என்கிறாயா?

வேண்டாம் இந்த விளையாட்டு
போதும் இனியேனும்
இதனை நிப்பாட்டு

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய