Saturday, July 30, 2011

ஏற்றுக்கொண்ட வேளையில்...

ஏற்றுக்கொண்ட வேளையில்
யாம் என்னசெய்தோம்? என்று
நினைக்கையில் எரிகிறது நெஞ்சம் எரிமலையாக
தமிழ்மகளின் தலைமகனை
தரணியில் தமிழனின்
அறமும் மறமும் வற்றிவிடவில்லை
என்று அறிதியிட்டு வரையறை செய்தவனை
எம்மினத்தின் இறுதி மன்னனை
இங்கு இழுத்துவந்து
கழுவேற்ற வேண்டுமென்று
கவிதைபாடி கட்டளைப் பிறப்பித்தவர்
அதே தமிழனின் தலைமையாய்
இருக்கிறாரென்றால்
உண்மையில் தமிழன்
தரம் தாழ்ந்துதான் போய்விட்டான்
குணம் மறந்துதான் மாய்ந்துவிட்டான்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய