சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் கலையுலக கலைங்கர்களும் ஈழத்தை வியாபார நோக்குடன் அணுகுவதை கண்டித்து ஈழ உறவு (பதிவர்) பலர் வலியுடன் பதிவிட்டனர். அதற்காக மன்னிப்பு கோரியும் வியாபார நோக்குடயவரை தவிர்த்து உண்மை உணர்வாளர்களும் அதில் அலட்சியப் படுத்துத்த பட்டுவிடக் கூடாதே என்னும் நோக்கில் நான் எனதருமை ஈழத்து உறவுகளேயென்று ஒரு பதிவிட்டேன்,
அதில் தவறு செய்தவர்களுக்காக நான் மன்னிப்பு கோரியும், அதே வேலையில் உண்மை உணர்வாளர்களை காயப்படுத்தி விட வேண்டாம்யென்று கேட்டிருன்தேன், ஆனால் அதே பதிவிற்கு சில புல்லுருவிகள் என்னை வெறுப்பேற்றி, என் எண்ணத்தினை பிறழ்வு செய்வதாய் நினைத்து பின்னூட்டம் போட்டனர் அனானிமஸ் பெயரில்.
என்னே அவர்கள் வீரம், யார் இவர்கள்? ஈழம் பற்றி பேசினால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? நம்மை நோக்கி பின்னப்பட்ட சதிவலை இன்னும் இருக்கிறது யென்று சொன்னால் இவர்கள் ஏன் ஆதங்கப் படுகிறார்கள்? நான் புலிகளை மட்டும் ஆதரித்தோ, அல்லது போர் ஒன்றுதான் மீண்டும் வழி என்றோ பதிவிட்டிருந்தால் கூட இவற்றை பிடிக்காத யாராவது சிலர் எதிர்க்க காரணம் உண்டு, அப்படியே எதிர்த்தாலும் கூட அனாநிமசாய் வந்து வீரம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. அப்டி பட்ட இந்த மாவீரர்கள் ஏன் கோபப் படுகிறார்கள்?
அப்டிஎன்றால் இவர்கள் யார்? தமிழ் ஈழ கட்டமைப்பை பற்றியோ அல்லது தமிழர் ஒற்றுமையை பற்றியோ இவை இல்லாமல் ஒருமைபாட்டை வெளிக்காட்டும் வகையான பொதுவான, தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று சொன்னாலோ இவர்களுக்கு இவ்வளவு கோபம் வரவேண்டிய அடிப்படைக் காரணம் என்ன?
இவர்கள் இடும் பின்னூட்டம் எல்லாம் பிரிவினையை தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது இணைய ஊடகத்தில் தமிழ் ஈழ கட்டமைப்பை, ஈழமக்களின் நம்பிக்கையின் ஒற்றுமையை குலைக்கும் நோக்கிலோ இருப்பதாய் தோன்றுகிறது.
இதுபோன்ற கயவர்களின் கைகரியமே நமக்கெதிராய் பின்னப்பட்ட சதி வலை கண்ணுக்குத் தெரியாத இழையினூடாய் இருப்பது புலப்படுகிறதே. இவர்கள்தான் அந்த சதிவலையின் சிலந்திக் குட்டிகள். அதில் சிக்குபவரை சின்னாபின்னப் படுத்துவதும், வலை எங்கேனும் பலமிழந்தால் அதை பலப் படுத்துவதுமே இந்த குட்டி சிலந்திகளின் தலையாய வேலை.
இதற்கான தலைமை கைக்கூலியாய் இருக்கும் தின்று கொழுத்த விசசிலந்திகள் இலங்கையிலோ, மேற்கத்திய நாடுகளிலோ ஏன் தமிழ்நாட்டிலோ கூட இருக்கலாம், அனால் எங்கு இருந்துகொண்டு என்ன சதி செயல்கள் செய்தாலும் அநியாயம் என்றுமே வென்றதில்லை.
தமிழனின் நம்பிக்கையே நீதியும், நியாயமும் என்றைக்கும் சாவதில்லை என்பதுதான். அப்படி பட்ட நீதியும் நியாயமும் அவனுக்கு கிடைக்காமல் போய்விடுமா என்ன? உங்களால் முடிந்தவரை எவ்வளவு வஞ்சகமும் நரித்தனமும் செய்ய முடியுமோ செய்துபாருங்கள். ஆனால் ஒன்றுமட்டும் சொல்லிவிடுகிறேன் காலம் இப்படி போகாது, நிச்சயம் மாறும் விடிவு ஓர்நாள் வந்தே தீரும். அன்று இந்த சிலந்திகள் இருக்கும் இடம், தடம் தெரியாமல் போகும்.