தனிமை தணல் மூட்ட .....
எரியும் எண்ணத்தில் புகைந்து கொண்டிருக்கிறது நினைவுகள்!
தெறிக்கும் ஒவ்வொரு சாம்பலும் அதன் துகள்களும்
வலிகளா....? வேதனைகளா....? இல்லை சுகங்களா....? என்று
அறியும் முன்னமே சுட்டுவிடுகின்றன,
அதனை தணிக்க முடியாமல் தவிக்கின்றேன்
மீண்டும் மீண்டும் தனிமையில் ......
சாற்றை விரட்டுவிட்டு
சக்கையை சுமந்து திரியும் வாழ்வில்
கடவுளை கணியவைக்கும் நம்பிக்கை
பூனையை புலி என்றும்
புலியை எலி என்றும் .....
நான் செல்லும் சாலைகள் அனைத்தும்
தொடங்கிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் முடிகின்றன
ஆனால் ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு சாலையிலும்
வேறு வேறு மரங்கள்