Tuesday, April 12, 2011

யாருக்கு என் (உங்க) ஒட்டு?

அன்பார்ந்த தமிழக மக்களே, நாளை எதிர்நோக்கும் தேர்தலில் எந்த தலைவர் வெற்றி பெறுவார், எந்த கூட்டணி ஆட்சி அமைக்கும், என்றென்னும் பொழுதிலே எனது வாக்கு யாருக்கு என்று நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.

உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் ஒரு வசனம் சொல்வார். "ஞாபகமறதி ஒரு தேசிய வியாதி" என்று அப்பொழுது எழுந்த கைத்தட்டல்களும், விசில் சப்த்தங்களும் என்னை புல்லரிக்கச் செய்தன, மக்கள் ரசனையை கண்டு அல்ல அட "மதி கெட்ட மூடர்களே" அது உண்மை என்பது உங்களுக்கு உரைக்க வில்லையே? என்று தான். அந்த தேசிய வியாதியை இப்பொழுது இனவியாதி என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் தமிழனின் நிலைமை அப்படி உள்ளது.

தமிழனின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன தெரியுமா? அவன் யாராரென்று அவனுக்கே தெரியவில்லை என்பதுதான் அதுதான் உண்மையும் கூட.

அப்படி தன்னிலை மறந்து, இயல்புநிலை இழந்து கண்டபடி கண்டவரை ஏற்றிவைத்து அழகு பார்த்து அவதிப்படும் அருமை தமிழரே. இதோ உங்கள் நினைவுக்காக சில.

1. எம்.ஜி.ராமச்சந்திரன், தமிழக வரலாற்றில் எந்த ஒரு தமிழனாலும் மறக்க இயலாத பெயர். அவர் எப்படி அரசியலுக்கு வந்தார்? யார்? எதற்கு? எப்படி? அவரை தி.மு.க வில் இணைத்தார்கள், எதற்கு அ.தி.மு.க வை தொடங்கினார் என்பதெல்லாம் வேறுகதை. ஆனால் ஈழத்திற்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தார் என்பது உண்மை. இது மட்டுமில்லாமல் மதுரை, நாகப்பட்டினம், போன்ற இடங்களில் பயற்ச்சிகள் கொடுக்கப்பட்டதும் உண்மை. இதற்க்கு சாட்சி திரு பழ.நெடுமாறனிடம் கேட்டால் சொல்லுவார் (யார் என்று தெரியுமென்று நினைக்கிறேன்?). அப்படி வந்த அ.தி.மு.க தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் தீர்மானம் போடுகிறார்கள். என்னவென்று?

யாரை கைது செய்ய வேண்டுமாம்?
எங்கு கொண்டு வந்து?
என்ன செய்ய வேண்டுமாம்?
தூக்கிலிட வேண்டுமாம்.

அன்று எங்கே போனீர்கள் தமிழ் உணர்வாளர்களே?

சரி மூன்று பெண்களை பேருந்தோடு எரித்தபோது பொழுது.

சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்த பொழுது.

சரி இவர் இப்படி என்றால் அவர் எப்படி என்று பார்ப்போம்

2. காங்கிரசில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் (யாரும் தவறாக நினைக்க வேண்டாம், நடந்தது உண்மை) செயல்பாடுகளின் விளைவுகளால் பெரியார் வெளியேறினார். தி.க வை துடங்கினார்.

அதிலிருந்து பிரிந்தது தி.மு.க அண்ணா தலைமையில். திராவிட கட்ச்சிகளின் அடிப்படைக் கொள்கைகளின் முக்கிய ஒன்று காங்கிரசை தமிழகத்திலிருந்து முற்றிலும் நீக்குவது. அதற்க்ககத்தான் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க காகிரசுடன் கூட்டணி வைத்தபொழுது, மூப்பனார் காங்கிரசிலிருந்து பிரிந்து தி.மு.க வுடன் தமிழ்மாநிலக் காங்கிரசை உருவாக்கி கூட்டணி வைத்தார். ஆனால் அதே தி.மு.கஇப்பொழுது என்ன செய்கிறது?.

குடும்ப அரசியல் ஒருபுறம்
ஸ்பெக்ட்ரம் ஒரு புறம்
மதுரை பத்திரிக்கை அலுவலக எரிப்பு
உண்ணாவிரத நாடகம்


இதைவிட இவர் தமிழகத்தில் வடுதலைப் புலிகளை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்து அவர்கள் தூக்கிலடப் பட்டனர். அதற்க்கு அவர்களை இங்கே கொன்றிருக்கலாம்.


3. வை.கோ. தமிழீழ்த்தில் அதிக ஈடுபாடு நல்ல பேச்சாளர், வழக்கறிஞர் இன்றை வரை விடுதலை புலிகளின் தடைநீக்க இந்திய அரசிடம் போராடும் தமிழர். இருந்தாலும் இவரை தமிழக அரசியலில் நம்ப முடியாத காரணம், பணப் பட்டுவாடா, கடந்த தேர்தலில் பொழுது இவர் அடித்தக் கூத்துக்கள் கொஞ்சமா நிஞ்சமா, இன்று ஈழமும் இல்லை அரசியலும் இல்லை, கொஞ்சநாள் பிறகு கட்சியும் இல்லை என்ற நிலைமை. தொலைநோக்குப் பார்வை இல்லாதாவர். முக்கியமாக் இந்தத் தேர்தலில் இல்லதாவர். எப்படி நான் ஒட்டு போடுவது.

4. விஜயகாந்த்,
இன்றைய வடிவேலின் நிலைமை நிச்சயம் தமிழக மக்களுக்கு, தன்னை ஒரு கதாநாயகனாக நினைத்துக்கொள்ளும், அரசியலில் கலைங்கருடன் இருந்து கத்துக்கொண்ட கொஞ்ச அரசியலில் ஆண்டுவிட நினைக்கும் அனுபவமற்ற, தன்னிலை மறந்து பேசும் பெருந்தலைவர். பேசக்கூட பொறுமையற்ற இவர் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் கட்சி ஆரம்பிக்கும் முன்பு வரை தமிழீழம் பற்றி மூச்சாய் பேச்சாய் பேசியவர், கட்சி ஆரம்பித்தபிறகு ஒரு கண்டனம்?, ஒரு அறிக்கை?, ஒரு வார்த்தை?................எதுவமில்லை ஆனால் தமிழகத்தின் முதல்வராகிவிட ஆசை, அவருக்கு கொடி பிடிக்க சிலர், கூட்டணி கட்சி சிலர், ஓட்டுபோட சிலர்.....ஏனப்பா தமிழா? தன்மானம் எங்கேயப்பா? குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் கொடுத்துவிட்டயா?

சுறா அப்படீன்னு ஒரு படம் அது ஓடுச்சா?, நல்ல படமா? யார் நடிச்ச அதெல்லாத்தையும் விட அதுல ஒரே ஒரு வசனம் எனக்கு ரொம்ப புடுச்சுப்போச்சு,

"உலகத்துல தன்மானத்தைப் பத்தி பெருமையா பேசுரவனும் தமிழன்தான்
அத அடிக்கடி கேவலப் படுத்துரவனும் தமிழன்தான்"


ஒட்டு போடுவது என்பது ஒரு கடமைதான் நான் இல்லை என்று மறுக்க வில்லை, ஆனால் எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்லக் கொள்ளி என்று பார்த்து பார்த்து ஒட்டு போடுவதற்கு பதில், போடாமலே இருப்பது மேல் அல்லவா?


அந்த 49 ஒ போடும் முயற்ச்சியில் அவமானப் படுத்தப்பட்டு, மிரட்டப்பட்டு விரட்டப்பபட்டவன் நான். இதுவரை நான் ஒட்டு போட்டது கிடையாது, என் கையில் மை பட்டது கிடையாது.

நாம் ஒருவரை ஆட்சிக்கு கொண்டுவர நினைத்து ஒட்டுபோடுகிறோம். அந்த ஆட்சியில் ஊழல் மிக்ந்துவிட்டால், நம் மக்களுக்கு நாமே துரோகமிழைத்தது போல் ஆகாதா? நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டதுபோல் இல்லையா?

அவர் மாறிவிட்டார், இவர் மாறிவிட்டார் என்று திரும்பத் திரும்ப இவர்களையே மாற்றி மாற்றி அமர்த்துவது பின்பு ஐயயோ என்று புலம்புவது?

அந்தத் தலைமுறையில் மாறும், இந்தத் தலை முறையில் மாறும் என்று நாம் ஒட்டு போட்டு கொண்டே இருந்தால்? எந்தத் தலை முறையிலும் மாறது. நாம்தான் மாற்ற வேண்டும், இங்கு நாம் என்னும் சொல் ரொம்ப முக்கியம்.

ஜனநாயகத்தை ஒத்துபோயோ, அல்லது ஆயுதம் ஏந்தியோதான் போராடி புரட்சி செய்யணும் என்றில்லை, ஒத்துழையாமல் புரட்ச்சி என்பது இந்தியாவுக்கு புதிதல்ல.

இதுவும் ஒரு ஒத்துழையாமை, ஒரு தனிமனிதன் மட்டும் செய்தால் கடமை மீறல், அதையே ஒரு குழுவாக ஒருங்கிணைத்து செய்தால் அது ஒத்துழையாமை,

இப்படிப் பட்ட ஒரு ஒருங்கிணைப்பை எப்படி உருவாக்குவது என்பதுதான் எனக்கு புரியவில்லை, அவரவர் வீடு, ஜன்னலும், கதவும் பாதிக்க படக்கூடாது என்று பயப்படும் வரை, அவை சுரண்டபட்டுக் கொண்டுதான் இருக்கும்

இப்போ யாருக்கு ஒட்டு போடட்டும் இந்த தமிழன், யாருக்கு வேண்டும் இந்த தமிழன் போடும் பிச்சை

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய