Saturday, July 30, 2011

உன்னதம் எது?

மண்ணை முட்டினாலும்
விண்ணை எட்டினாலும்
வேர் விடுத்தாலும்
விழுது வளர்த்தாலும்
நிழல் நிறைத்தாலும்
கனி கொடுத்தாலும்
விதை உதிர்த்தாலும்
பசுமை படர்ந்தாலும்
காற்று கலைத்தாலும்
உதிர்ந்தாலும்
கசிந்தாலும்
வெட்டுண்டாலும்
கட்டுண்டாலும்
சாளரமானாலும்
தீ தீண்டினாலும்
நீர் பெயர்த்தாலும்
அது அதுவாய்
இருத்தல் என்பது
உன்னதமே

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய