Monday, July 11, 2011

அழுகுரல்....

சிந்தனை மறந்து சிரித்து
கண்களின் கண்ணீர்
முத்துக்களாய் சிதறி ஓடும்
பொழுதிலும்.....

பகலை இரவாய் நினைத்து
எவருடனும் பேச தவிர்த்து
தனிமையை தழுவிக்கொள்ளும்
பொழுதிலும்...

மனமென்னும் குப்பைக் கூடையில்
கிழித்தும் கழியாமலும் வீசப்பட்ட
நினைவுகளை அலசி அடுக்கும்
பொழுதிலும்....

கணினித்திரையில் கண்களைப் பதித்து
காரியமே கண்ணாய் இருந்து
கடமையாற்றி காலம் கழிக்கும்
பொழுதிலும்....

சிதறிய சிந்தனைகளும்
சிதைக்கப்பட்ட நினைவுகளும்
தொடபில்லாமல் தொடர்ச்சியாய்
வந்து கனவாய் கவ்வும்
பொழுதிலும்....

நிலையில்லா மனம் நிலையான
இடம் தேடி நித்தம் நித்தம்
நீந்தி காலம் கடத்தும்
பொழுதிலும்......

அலையடிக்கும் கரைபோல்
சலனம் சஞ்சரித்து சலனப்படுத்தி
சஞ்சலம் செய்யும்
பொழுதிலும்........

எனக்குள் கேட்கும் எங்கோ
ஓர் அழுகுரல்
ஏனோ??????????

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய