Friday, August 26, 2011

ஓட்டைகள் நிறைந்தக் குடை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்கள், வரைமுறைகள் அனைத்தும் மிக அருமை என்று சொன்னால் என்னால் மட்டுமல்ல உண்மை விரும்பிகள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


சட்டம் என்றால் என்ன? எந்த ஒரு தனிமனிதனும் தவறு செய்துவிடக் கூடாது. அதிலும் மக்கள் நலன் பாதிப்பு, பண்பாடு மற்றும் கலாச்சார சீரழிவு, தனிமனித ஆளுமை, தனிமனித சுரண்டல், ஒழுக்க மீறல் போன்ற விசயங்கள் முதன்மையாகும். சரி அப்படி செய்துவிட்டால்? விசாரணை தண்டனை. இவையணைத்தும் சரியாக நடக்கிறது என்றால் ஏன் தவறுக்க மீண்டும் மீண்டும் நடக்கிறது? அப்படி தவறுகள் நடக்கிறது என்றால் சட்டம் சரியில்லை என்றுதானே அர்த்தம். சட்டம் இங்கு ஒரு ஓட்டைகள் நிறைந்த குடையகத்தான் காட்சியளிக்கிறது எனக்கு.



ஐம்பது ரூபாய் திருடியவனும், ஐநூறு கோடி ரூபாய் திருடியவனும் ஒரே முறையில் விசாரிக்கப் படுவதில்லை. உண்மையில் யாரை அதிகமாக அடித்து விசாரிக்க வேண்டும்? குறைந்தபணம் திருடியவனையா? அல்லது அதிக பணம் திருடியவனையா? ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கிறது. பிறகு ஏன் இந்த சட்டம் நமக்கு?

கிரிமினல் பீனல் கோட் என்னும் பிரித்தானியரின் இந்திய அரசியல் சட்டத்திலிருந்து பெயர்த்து உருவாக்கப் பட்டதுதான் இந்தியன் பீனல் கோட் என்று சொல்லப்படும் இந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

இதன் அடிப்படி தத்துவம் என்ன வென்றால்? நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், அனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாதாம். என்ன ஒரு முட்டாள் தனம் இது? நிரபராதி யார் குற்றவளி யார் என்று தெரியாத, கண்டுபிடிக்க முடியாத ஒரு சட்டம், நூறு குற்றவாளிகள் தப்பிக்கும் அளவிற்கு ஓட்டையுள்ள சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தீர்வாய் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லும் போது விசாரணையில் ஏன் இந்த வேறுபாடுகள்?

அது என்ன A Class, B Class, C Class சிறைவசதி யார் இந்த சட்டங்களை இயற்றியது? திருடனோ, கொலைகாரனோ, அரசியல்வாதியோ, போராட்டக்காரனோ, விசாரணைக் கைதியோ, தண்டனை கைதியோ யாராய் இருப்பினும் என்ன? சிறை அனைவருக்கும் ஒரே விதமாய்த்தானே இருக்க வேண்டும். அதில் என்ன வகுப்புப் பிரிவுகள்?.

இதுபரவாயில்லை தவறு செய்பவர்களை கண்டிக்கவும், கண்டுபிடிக்கவும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை வாங்கித்தரவும் நியமிக்கப் பட்டதுதான் காவல்துறை, புலனாய்வுத்துறை, ஆனால் இவை இரண்டியும் கட்டுபாட்டிற்க்குள் வைத்திருப்பது அதே தவறு செய்பவர்கள்தான். இதைத்தான் "திருடன் கையில் சாவி கொடுப்பது என்பார்களோ" என்று தெரியவில்லை,


அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை என்று யாருக்குமே புரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஜன லோக்பால் திட்டத்துடன். இன்னும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதாவது விசாரணை செய்யும் காவல் துறையையும், புலன்விசாரணைத் துறையும், சட்டதிட்டங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

இவை இரண்டும் நீதிமன்றத்தை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதிக்கு கீழும் இயங்காமல் செய்துவிட்டாலே நாட்டில் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்க்கப் பட்டுவிடும்.

நீதித்துறையை சார்ந்த இந்த இரு பிரிவுகளும் நீதிமன்றத்தின் கட்டுபாட்டில் இயங்கவேண்டும் என்பதுதானே நியதி. எந்த ஒரு அரசியல்வாதியும், அரசாங்க அதிகாரிகளும் இவை இரண்டையும் கட்டுப்படுத்த இயலாத முறையை இயற்ற விடும்.

ஆனால் அவையும் ஒரு குறிப்பிட்ட பொதுஅமைப்பின் கீழ் இயங்க வேண்டும். அது உச்சநீதி மன்றமாய் இருந்தால் இன்னும் பாதுகாப்பாய் இருக்கும்
.

இதுபோல் சட்டத்தை தனக்கு சாதகமாக அவர்கள் வளைக்க முயற்ச்சிக்கும் அத்துனை ஓட்டைகளும் அடைக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் சமமான விசாரணை, சமமான நீதி, சரியான தண்டனை என்று கிடக்க வழி செய்கிறோமோ ஆண்டுதான் தவறுகள் குறையும். இல்லையெனில் தவறுகள் பெருகப் பெருக ஓட்டை சட்டப் புத்தகத்தின் பக்கங்கள் மட்டுமே பெருகுமே ஒழிய. நன்மையெதும் விளையாது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை தத்துவத்தை மாற்றியமைப்போம்

"ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது

ஒரு குற்றவாளியும் தப்பிவிடக் கூடாது"

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய