Tuesday, August 23, 2011

தனித்திரு.... விழித்திரு....

உலக முன்னோடிகளின் முதன்மையாய் இருந்து உலகுக்கு பண்பாடு, அறம், மறம் கற்றுத்தந்து மனிதனை மனிதனாய் காட்டிய நம் திராவிட இனம் இன்று கிடப்பது எங்கே என்றுகூட தெரியவில்லை?

பார்ப்பனியரின் சதியில் சிக்குண்டு, சாதியில் விழுந்து சகட்டுமேனிக்கு புரண்டு இன்றும் எழமுடியாமல் இருக்கிறோம். போதும் இந்த வேறுபாடுகள், வேண்டாம் இந்த ஒற்றுமையின்மை. களைவோம் வேறுபாடுகளை, அழிக்க நினைப்போருக்கு காண்பிப்போம் நம் இனத்தின் வலிமையை.

தன்மானத்தை இழந்துவிடாதே, தன்மானத்தை இழந்தால் தமிழனே இல்லை என்று அர்த்தம்.

"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவனுக்கொரு குணமுண்டு"

என்னும் கூற்று பொய்யாய் போய்விடாமல் காப்பது நமதுகடமை.

காசுக்காக தன்மானத்தை இழக்க வேண்டாம், தன்மானம் காத்து தலைநிமிர்ந்து நின்றால் பணம் உன்னைத் தேடிவரும், உழைத்தல் மட்டும் போதும் உயிர்வாழலாம், தன்மானம் இழந்து, உரிமையிழந்து, அடையாளம் இழந்து உயிர்வாழ்ந்தால் பலன் என்ன?

இலவசங்கள தவிர்ப்போம், இங்கு எதுவுமே இலவசம் இல்லை. கொடுக்கும் பொருள்கள் அனைத்திற்கும் கடன்சுமை நம் தலைமீதே மறக்க வேண்டாம்.

கல்வி, அரிசி, மருத்துவ வசதி, நிலம் இவற்றைதவிர வேறு எதுவொன்றும் இலவசமாக கிடைத்தாலும் உதறித்தள்ளுங்கள். உழைக்காமல் வரும் பொருள்கள் அனைத்திலும் கண்ணுக்குத்தெரியாத அடிமைத்தனம் ஒளிந்திருக்கும்.

தமிழன் என்றுமே உலகில் தனித்திருப்பவன் என்பதை உலகுக்கு உணர்த்துவோம். நம்மை நாமே குறைத்து மதிப்பிட வேண்டாம். நம்பிக்கை வேண்டுமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்லணையை கவனியுங்கள். எப்படி சாத்தியமாயிற்று? ஆயிரத்தைனூறு ஆண்டுகளுக்கு முன்னுள்ள பல்லவ குகைக்கோயில்களை, சிற்ப்பங்களை பாருங்கள் எதனால் முடிந்தது இது? ஆயிரம் ஆண்டுகள் நம் இனத்தின் பெருமையாய், நமது திறமையின் செழுமையாய் இருக்கும் தஞ்சை பெரியகோயிலை, கங்கைகொண்ட சோழபுர கோயில்களைப் பாருங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பாருங்கள், ராமேசுவர கோயில்களைப் பாருங்கள். எப்படி இவைஅனைத்தும் சாத்தியம்? தன்னம்பிக்கையும் தன்மானமும் இல்லாமல் இப்படி ஒரு சரித்திரம் நிகழுமா?

இது அனைத்தும் இலவசங்களா இல்லை உழைப்பின் சன்மானமா? இலவசம் கொடுத்தால் இளிச்சவாயனாகிவிடுவான் தமிழன் என்ற நினைப்பை உடைத்தெறிவோம், அறிவு வளர்க்கும் கல்வியை, திறமை வளர்க்கும் சிறுதொழில் பயிற்ச்சியை இலவசமாக தாருங்கள் என்றுமட்டும் சொல்லுவோம். அனாவசிய ஆடம்பர இல்லவசங்கள் என்றும் அழிவையே தரும் என்பதனை உணர்வோம்.

சமமான கல்வி, திறமைக்கு வேலைவாய்ப்பு, சிறு தொழில், கைத்தொழில் வளர்ப்பு இருந்தால் போதுமே! இட ஒதுக்கீடு என்பதே தேவையில்லை. இடஒதுக்கீடு இல்லையெனில் சாதி என்பதே மறைந்துபோகும்.

சாதிகள் மறந்தும் மறைந்தும்போனால், சாதிக்கட்சிகள் காற்றில் கரைந்துபோகும், தமிழினம் இங்கே ஒன்றுபடும், மீண்டும் பொற்க்காலம் உருவாகும். மூட நம்பிக்கை ஒழிக்கப்பட்டுபோகும், அதை வைத்து நசுக்கப் பார்க்கும் கூட்டம் குலைந்து கலைந்துபோகும்.

தமிழர்கள் மீண்டும் தலையெடுப்போம், நேர்மையையும் நெறியையும் உலகுக்கு எடுத்துரைப்போம், எதிர்கால சந்ததியினரின் வாழ்வை வளமாக்குவோம்.

இந்த சாபங்களும், கேடுகளும் நம்மோடு போகட்டும், தன்மானத்தை தலைநிருத்த பன்பாடு தெரியாத பார்ப்பன கூட்டத்தின் சதிகளை உணர்ந்துகொள்வோம்.

இலவசங்கள் வேண்டாம் என்போம்,

தினமலர், தினமணி, துக்ளக் போன்ற பத்திரிக்கைகளை ஒதுக்கித்தள்ளுவோம்.

தைத்திருநாளே தமிழர் ஆண்டின் முதல்நாள் என்று கொண்டாடுவோம்

பொங்கல்திருநாளே தமிழரின் உண்மை பண்டிகை என்றுணர்வோம்

சூரியனே தமிழரின் கடவுள் எனக் கொள்வோம்

வந்தவரை வாழவைப்போம்

நம் மக்களை ஆள்வது நாமாகவே இருப்போம்

வளம்காண்போம், இனம்காண்போம், தரணியில் புகழ்காண்போம்
இல்லாமை, கல்லாமை, இயலாமை, பொறாமை என்பனவற்றை இல்லாமல் செய்வோம்

தரணியில் தனித்திருப்போம் ................. என்றும் விழித்திருப்போம்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய