Sunday, August 21, 2011

தமிழனை பழிவாங்க துடிக்கும் காங்கிரஸ்

இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடியது போதாதென்று, இரத்த ருசிகொண்ட இந்த காங்கிரஸ் என்னும் பேய் இன்னும் தாகம் அடங்காமல் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப் பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கில் ஏற்றிவிட்டு அவர்கள் ரத்தத்தையும் குடித்த பிறகுதான் அடங்குவது என்று திரிந்துகொண்டிருக்கிறது.

அடுத்தமுறை நிச்சயம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது தொண்ணூற்றியொன்பது சதவிகிதம் அவர்களுக்கே தெரிந்துவிட்டதால் இந்த ஆட்ச்சிகலத்திலேயே முடிந்தவரை தமிழர்களை பழிவாங்கி வேண்டும் என்றுதான் இந்த கருணை மனு நிராகரிப்பு என்னும் சதிவேலையை அரங்கேற்றியிருக்கிறது.

இந்தமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக மக்களுக்கு பல இலவசங்கள் கொடுத்தபொழுதே நன்கு உணரப் பட்டது. வாயில் இனிப்பை வைத்து கழுத்தை அறுக்கப்போகும் செயலில் இறங்கும் என்று. அறுத்ததுமட்டும் போதாதென்று ரத்தம் குடிக்கவும் தொடங்கியிருக்கிறது அந்த ஈனப் பிறவிகள்.

தூக்கு தண்டனையிலிருந்து தமிழனைக் காப்பாற்ற போராட்டங்கள் நடத்தி, பேரணிகள் செய்துவரும் நம் தமிழனை கைது செய்ய சொல்லியும், அவர் நடத்தும் பேரணிகள் போராட்டங்களை தடை செய்ய சொல்லியும், தமிழ்நாடு இளைங்கர் காங்கிரஸ் என்று சொல்லிக்கொள்ளும் ஒட்டுண்ணிகள், பணத்திற்காக நிறம் மாறும் பச்சோந்திகள், தான் மட்டும் பிழைக்க தன் இனத்தையே காட்டிக்கொடுக்கும் கயவர்கள் காவல்துறையிடம் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

இதுபோன்ற கோட்டான்கள் நாளை இந்தியாவை மட்டும் எப்படி காப்பாற்றுவார்கள்? இனப்பற்று இல்லாத ஒருவன் எப்படி நாட்டுப் பற்றை மட்டும் எப்படி காத்திட முடியும்?

நாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அந்த திருட்டுகும்பல் பிறகு ஏன் தமிழக மக்களின் வாக்கை கேட்டு அவர்கள் வீட்டு வாசலில் நாக்கை தொங்கபோட்டு நிற்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

காங்கிரசின் உண்மை வாரிசு என்று சொல்லிகொள்ளும் இவர்கள் ராஜீவ்காந்தி இறந்தவுடன் இவர்களும் சாக வேண்டித்தானே ஏன் சாகவில்லை? சரி தமிழர்கள் தான் அதற்க்கு காரணம் என்றால் பிறகு ஏன்? அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

புலிகளின் பாதை தவறானது என்று வியாக்கியானம் பேசும் இவர்கள், மாவோயிஸ்டுகளிடம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இனப்படுகொலைக்கு உடந்தையாய் இருந்ததை என்ன சொல்லுவார்கள்? உலக அரசியல் என்றா?
ஈழத்தமிழரின் நிலமையைகாண செல்வதாய் சொல்லி, ராஜபக்சேயுடன் விருந்து உண்டு வந்தவர்களை என்ன சொல்வது?

தமிழனை முட்டாளாய் நினைத்திருந்தவர்களுக்கு சரியான பாடம் கடந்த தேர்தலில் கற்ப்பிக்கப் பட்ட பிறகும் இன்னும் திருந்தாமல் இருக்கும் இதுபோன்ற கோடரிக் காம்புகள் இருக்கும் வரை தமிழ்நாடும் ஒருநாள் ஈழம்போல் மாறினாலும் ஆச்சர்யபட ஒன்றுமில்லை

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய