Thursday, August 18, 2011

காணவில்லை கூத்தாடிகளை

நல்ல கருத்துகளை சுவைகுன்றாமல் களிப்போடு கொண்டு சேர்க்க பயன்படுத்தப்பட்டது நாடகமும், திரைத்துறையும். அதில் அவ்வப்போது களிப்பிற்காக சேர்க்கப்பட்ட ஆபாச, நகைச்சுவை, வன்முறை போன்றவற்றை இன்று முதன்மையாக எடுத்துக்கொண்டு நல்லவிசயங்களை பேருக்காக இணைத்துக்கொள்ளும் வியாபார சாக்கடையாகிக் கிடக்கிறது திரைத்துறை.

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் கதாநாயகனாக நடிப்பவநெல்லாம் நல்லவன் என்றாகிவிட்ட இந்த நிலையில், வெளிநாட்டுப் பொருள்களின் வர்த்தகத்திற்கும் விளம்பரத்திற்கும், பண்பாட்டு சீரழிவிற்கும் கலாச்சார கேடு விளைவிப்பதர்க்கும், வரியிட்டால் கொடிபிடித்து கூச்சல் போடுவதற்கும் முன்னிற்கும் கலைக் கூத்தாடிகளே எங்கே போய்விட்டீர்கள்?.

அரசியல் கட்சிகளின் விளம்பரத்திற்கும், தேர்தல் கூட்ட சொர்ப்போழிவுகளுக்கும் மக்களை ஏமாற்ற விளம்பரம் செய்யும் சமூக ஆர்வல கூத்தாடிகளே எங்கே இருக்குறீர்கள்?

தனிமனிதனால் ஒரு போராட்டம் வலுபெற்று நாடே களத்தில் இருக்கும்போது தேவையில்லாமல் கூட்டம் சேர்க்க குத்தாட்டம் போடும் கலைச் சேவகர்களே எங்கே ஓடிவிட்டீர்கள்?

இன்று ஊழல் ஒழிப்பிற்காக போராட்டம் செய்தால், நாளை கறுப்புப்பண ஒழிப்பிற்காக போராடவேண்டி வருமே என்று அமைதியாய் இருக்குறீர்களோ?
கறுப்புப்பண ஒழிப்பு வந்தால் கையும் களவுமாக பிடிபடுவோம் என்று பதுங்கி இருக்குறீர்களோ?

எங்கு சென்று ஒளிந்தாலும் சரி, எங்கு வைத்து மறைத்தாலும் சரி, உப்புத்தின்னவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும், தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். மக்களை முட்டாளாய் நினைத்து ஏறிமிதிக்க நினைக்கும் கயவர்கூட்டம் காணமல் போவதென்பது உறுதி.

ஊழலை ஒழித்து, பதுக்கல் பணத்தை வெளிக்கொணர புரட்ச்சி புறப்பட்டுவிட்டது. ஓடி ஒளிந்து பலனில்லை வெளிவந்து போராடுங்கள், உங்கள் பாவங்களை நீங்களே கழுவிக்கொள்ளுங்கள், மக்களோடு மக்களாக நின்று ஒருமித்த குரல்கொடுங்கள்.

ஏழ்மையற்ற சமுதாயம் உருவாக்க பாடுபடுங்கள், அனைவரும் ஒன்றுகூடுவோம், முதலில் வீட்டை சுத்தப்படுத்துவோம் பிறகு அதனை அழகுபடுத்துவோம். அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்க, எல்லோரும் நல்வாழ்வுபெற, எதிர்கால இந்தியா ஒரு சிறப்பான நாடக உருவாக கைக்கோர்ப்போம்.

எந்த துறையாய் இருந்தாலும், மக்கள்நலன் யோசிப்போம், நன்மைக்கு மட்டுமே துணைநிர்ப்போம், தீமையை தகர்த்தேடுப்போம். இன்றே உருதிகொள்ளுங்கள். தனிமனிதனாய் பலன்தேட எண்ணவேண்டாம்.

மக்களிடம் தேவையான விழிப்புணர்வு வளர்ந்துவிட்டது, அவர்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம். மக்களோடு மக்களாய் மாறி மக்களே மக்களுக்காக ஒரு நல்ல ஆட்சி நடக்க சமுதாய புரட்சி செய்வோம். இந்தயாவில் ஒருவனுக்கு வீடில்லை, ஒருவேளை உணவில்லை, வாழவழியில்லை என்ற நிலைகளை மற்றியமைத்துவிட்டு இல்லாமை என்பதே இனி இல்லை என்னும் நிலையை உருவாக்கிவிட்டு பிறகு களிப்பில் திளைப்போம்.

செய்வோம் சமுதாயத்தொண்டு! வாழ்க சமுதாயம்! வாழ்க மக்கள்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய