Saturday, August 27, 2011

இலங்கைக்கு இந்தியா பயப்படுகிறதா?



பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட இலங்கைத்தமிழர் பற்றிய விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா அளித்திருக்கும் பதில்கள் தமிழருக்கு செய்யும் துரோகமாகவும், இலங்கைக்கு இந்தியா பயப்படுகிறது என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

ஆறுகோடி மக்களின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியவில்லை, சீனா என்னும் பூதத்தைகாட்டி பயமுறுத்திவரும் ஒரு சிறு நாட்டை அடக்கி கையாள தெரியவில்லை இவர்கள் நாட்டை வல்லரசாக்கப் போகிறார்களாம்? என்ன ஒரு பிழைப்பு இது?

கச்சத்தீவு இலங்கையின் எல்லையில்தான் உள்ளதாம். அதனால் தமிழக மீனவர்கள் போகக்கூடாதாம். இந்தியா - இலங்கை ஒப்பந்தப்படி அது இரு நாடுகளுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும் என்றும், இருநாட்டு மீனவர்களும் அங்கு மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று இருப்பதுகூட தெரியாத ஒரு வெளியுறவு மந்திரி இருக்கிறார் என்றால் இந்தியாவின் தலையெழுத்தை நாம் என்னவென்று சொல்வது?

மதத்தின் பெயரால் சீனாவுடன் ஒருமனதாய் ஒன்றுபட்டு நிற்கும் அந்த நாட்டிற்கு ஒரு சிறு தீவை தாரைவார்த்துகொடுத்து தன்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கும் ராஜ தந்திரத்தின் மதிப்பை எப்படி எடைபோடுவது?


சொந்தநாட்டு மக்களுக்கு துரோகம் செய்து, இலங்கையில் இனப்படுகொலைக்கு உதவிசெய்து, உலகமே அவர்களை எதிர்த்துக்குரல் கொடுக்கும் பொழுது. இந்தியாமட்டும் முட்டுக்கட்டையாக இருப்பது எதற்கு? அரசியல் தந்திரமா? இல்லை பயமா?


இலங்கையுடனான உறவு அவ்வளவு முக்கியமா? ஏன்? அந்த உறவை வைத்துக்கொண்டு என்ன செய்யப் முடியும் என்று நினைக்கிறார்கள் இந்த உலகமாக புத்திசாலிகள் என்றுதான் தெரியவில்லை? பிறகு ஏன் பாக்கிஸ்த்தானுடன் மட்டும் அப்படி முடியவில்லை?

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், காணமல் போவதும் குறைந்துள்ளதாம் இதை சொல்வது ஒரு வெளியுறவுத்துறை மந்திரி வெக்கமாயில்லை? இதில் தெற்காசியாவின் மிக்கபெரிய நாடு என்று பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

காங்கிரசை இரண்டாக பிரிக்கலாம், இந்திராகாந்திக்கு முன் இந்திராகாந்திக்கு பின் என்று. இந்திரகந்திக்கு பிறகு இநதிய அரசியலில் திறமையான ஒரு நாடாளும் தொலைதுரப் பார்வைகொண்ட துணிச்சலான சூத்திரதாரி இல்லை என்றே கூறலாம். இலங்கை மட்டுமல்ல சீனாவே கண்டு பயப்படும் அளவிற்கு துணிச்சலான பல முடிவுகளை எடுத்தவர் அவர். அப்படி ஒரு தலைவர் காங்கிரசில் மட்டுமல்ல இந்தியவிலேயே இதுவரை எவருமில்லை.

இப்பொழுதைய காங்கிரஸ் தலைவர்களிடம் பயமும், பழிவாங்கும் உணர்ச்சியும், அண்டிப்பிழைக்கும் புத்தியும் மட்டுமே காண முடிகிறது. இந்தியாவின் ஜனநாயகம் பற்றியோ? இந்தியாவின் இறையாண்மையை பற்றியோ யோசிப்பதாய் தெரியவில்லை.

மதம், இனம், மொழி இவற்றை வைத்து அரசியல் செய்தவர்யாரும் நிலையை இருந்ததில்லை. அவ்வளவு சிறந்த பிரதமரை திகழ்ந்த இந்திராகாந்தியை வீழ்த்தியது மதத்தை தொட்டதன் விளைவு. ராஜீவ்காந்தியை வீழ்த்தியது இனத்தை தொட்டதன் விளைவு.

இவ்வளவு வரலாறு தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவற்றை தொட்டு அரசியல் செய்யும் இதுபோன்ற தலைவர்களாலும் அவர்களின் கேடுகெட்ட செய்லகளாலும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும், சிறப்பும் சிதரிக்கொண்டிருக்கிறது, சிறுது சிறுதாக இந்தியா தனது தனித்தன்மையை இழந்துவருகிறது என்பது மறைக்க முடியாத உண்மை, நாம் மீண்டும் யாருக்கோ மறைமுகமாக அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதும் கண்ணிற்கு புலப்படாத உண்மை.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய