Tuesday, August 16, 2011

தனி மனிதனின் போராட்டம்.

இது இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்பதில் சிறுதும் ஐய்யமில்லை. ஒரு தேசத்துக்காக மீண்டும் ஒரு காந்தியவாதியின் தியாகப் போராட்டம்.

அன்று ஆகிலேயனுக்கு எதிராக, இன்று சுரண்டும் அரசியல் வாதிகளுக்கு எதிராக.

அண்ணா ஹோசரே - ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் காந்தியவாதி கைது. ஜனநாயகம் கொல்லப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்கள் நலனுக்காக போராடும் ஒரு மாமனிதனை அடக்கியாள முற்படுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி பாடுபடுகிராறே தவிர, மக்களுக்கு தொண்டு செய்யவே நாங்கள் என்று கூறிக்கொண்டு கொள்ளையடிக்கும் அரசியல்வா(வியா)திகள் அறிக்கை விடுகிறார்களே தவிர. போராடவோ அல்லது அண்ணா ஹோசரேவை ஆதரித்து களம் காணவோ துணியவில்லை. ஏன்? அனைவரும் திருடர்கள் என்பதாலோ என்னவோ?

இன்றுமுதல் தொடங்கட்டும் மக்களை சுரண்டும் ஊழல் பெரிச்சாளிகளை ஒழிக்கும் இன்னொரு போராட்டம். மக்கள் நினைத்தால் நடவாதது ஒன்றுமில்லை. மக்களே வாருங்கள் அரசியல் சாக்கடையை சுத்தப் படுத்துவோம்.

திருடித் தின்று கொழுத்துக் கிடக்கும் ஊழல் பண்ணிகளை விரட்டியடிக்க இன்னொரு போராட்ட களம் காண்போம். அண்ணா ஹோசரேவை ஆதரிப்போம். இந்தப் போராட்டம் ஜனநாயக புரட்ச்சியாக வெடிக்கட்டும். அநியாயம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு பாடம் புகட்டப்படட்டும்.

ஒன்று கூடுங்கள், கண்டன் ஆர்ப்பாட்டங்கள் நடக்கட்டும். ஊர்வலங்கள் கிளம்பட்டும். வேலை நிறுத்தம் தொடங்கட்டும். ஊழலுக்கு எதிரான வலிமையான சட்ட மசோதா இயற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடுவோம். இது காங்கிரசுக்கு மட்டுமல்ல. எந்த ஒரு அரசியல் கட்சி ஆட்ச்சிக்கு வந்தாலும் இது பாடமாக இருக்கட்டும். மக்களை முட்டாளாக நினைக்கும் பன்றிகளை விரட்டுவோம்.

இதில் உனக்கு எனக்கு, உன் கட்சி என் கட்சி, வட இந்தியா, தென்னிந்தியா, சாதி மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு போராடுவோம்.

எதிர்கால இந்தியாவை வளமானதாக செய்வோம். நாம் படும் துன்பங்கள் இனி வரும் தலை முறைகளுக்கு வேண்டாம். அவர்களாவது புண்ணிய பூமி இந்தியாவில் வாழட்டும். பாவப்பட்ட இந்த இந்தியா நம்மோடு போகட்டும்.

ஊழல் கட்சிகள் ஒழிக, வந்தே மாதரம், வந்தே மாதரம்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய