Saturday, August 27, 2011

இந்திய இறையாண்மைக்கு வெடி வைக்கிறது காங்கிரஸ்

அத்துனை போராட்டம், எதிர்ப்புகள், கோரிக்கைகளை மீறி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிரைப் பறிப்பதில் குறியாக காய் நகர்த்தி தான் நினைத்தப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

ஆறுகோடி மக்கள் கெஞ்சி, கதறியும் ஈழத்தில் எதைப் பற்றியும் கவலைபடாமல் இரண்டுலட்ச மக்களை கொன்று குவித்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் மூவரையும் தூக்கில் ஏற்றியே ஆகவேண்டும் என்ற வெறியோடு திட்டமிட்டு நடத்துகிறது இந்த அரசு.

ராஜீவ் காந்தி சாவிற்கு பழிவாங்குவது, லோக்பால் பிரச்னையை திசை திருப்புவது, மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் தமிழக அரசுக்கு பிரச்னையை தருவது என்று ஒரே கல்லில் மூன்று மாங்காய் திட்டத்தில் இந்த மரணதண்டனையை நிறைவேற்ற துடிக்கிறது இந்த முட்டாள் காங்கிரஸ்.

இத்தனை திட்டங்களை போட்டு இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டிற்கும் வெடி வைப்பதாய் இருக்கும் என்பதை மறந்தோ அல்லது கவலைப்படமலோ செய்லப்டுத்தப் படுகிறது இந்த தண்டனை.

ஈழ அழிவிற்கும், இந்த மூவரது உயிர் பறிப்பிர்க்கும் இந்த காங்கிரசும், இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் பதில்சொல்லியே தீரவேண்டும்.

அதுவரை தமிழனுக்கு இழைக்கப் பட்ட துரோகத்திற்கு இந்திய அரசும், இலங்கை அரசும் பதில் சொல்லும்காலம் விரைவில் வரும். ஒவ்வொரு உயிர்களுக்கும் சம அளவில் இழப்புகளை சந்திக்கவேண்டி இருக்கும். ஜனநாயகம், சமத்துவம் என்று நடித்துக்கொண்டு சுயநல அதிகார ஆட்சி நடத்தும் இந்த அரசியல்வாதிகளுக்கு முடிவு விரைவில் வந்து தெளிவு படுத்தும்.

காவிரி பிரச்சனை,
முல்லைபெரியாறு பிரச்சனை,
கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை,
ஒக்கேனக்கள் திட்ட பிரச்சனை,
சேதுசமுத்திர திட்டம்,
கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தது,
தமிழகமீனவர் பிரச்சனை,
ஈழப் பிரச்சனை
இப்பொழுது இந்த தூக்குதண்டனை என்று
அனைத்திலுமே இந்திய அரசாங்கம் தமிழனுக்கும் துரோகமே இழைத்துள்ளது

இவை அனைத்திற்குமான விடை வை.கோ சொல்வதுபோல் இந்திய வரைபடத்தை திருத்தி அமைப்பதைத் தவிர வேறுஒரு வழியும் இல்லை.



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய