Monday, August 15, 2011

முதலில் ஒரு இந்தியன், பிறகு தமிழனா? (மீள் பதிவு)

நண்பா...

இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. உண்மை நிலமை என்னவோ அதை மட்டும் தான் கருத்தில் கொள்ளப்பட்டது. நீங்கள் கேள்வி பட்டதுண்டா ஒரு வாசகம்.

"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்று

அது எவ்வளவு உண்மை என்று நமக்கே தெரியும். இருந்தும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் ஏன்?

நமது வீடும், வயிறும் மட்டும் நிறைந்தால் போதுமா, அனைவரதும் நிறைய வேண்டாமா?

உங்கள் சித்தாந்தம் முதலில் ஒரு இந்தியன், பிறகு தமிழனா?

இந்தியன் என்பது ஒரு தேசப்பற்று தமிழன் என்பது இனப்பற்று,

1946 க்கு பிறகு பிறந்த இந்த இந்தியா பற்றிய தேசப்பற்று, 2000 வருடமாக இருக்கும் தமிழினப்பற்றை பின்னுக்கு தள்ளுகிறது இல்லையா? காரணம் பொருளாதாரம், வாழ்வமைப்பு, பாதுகாப்பு.

இப்பொழுது கேட்கிறேன் கிரிக்கெட், பாகிஸ்தான் இவை இரண்டைத் தவிர உங்கள் தேசப்பற்றை வேறெங்கு உங்களால் நிருபிக்க முடியும்.

காவிரி பிரச்சனையில்,
முல்லைப்பெரியாரில்,
கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சனையில்,
தமிழக மீனவர் பிரச்சனையில்,
ஒக்கேனேக்கல் குடிநீத் திட்டத்தில்,
சேது சமுத்திரத் திட்டத்தில்,
எதில் தான் முடியும்,
தமிழக விவசாயத்தின் தலையெழுத்தை மற்ற முடியுமா?

சரி இவ்வளவு வேண்டாம், வடநாட்டில் சென்று ஒரு தொழில் தொடங்கி நடத்துங்கள் பார்க்கலாம்,

சரி கேரளாவில், கர்நாடகாவில், ஆந்த்ராவில் முடியாத? சரி எங்குதான் முடியும் உங்கள் உங்கள் தேசப்பற்றை வைத்துக்கொண்டு.

என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா ஏன் இந்தியா மொழிவாரியாக பிரிக்கப்பட்டது என்று? ஏன் பெரியார் சொன்னதுபோல் திராவிட நாடு என்று தென் இந்தியாவையும், வடநாடு என்று வடஇந்தியாவையும் இரண்டு மாநிலமாக பிரிக்கவில்லை என்று?

என்றாவது நினைத்ததுண்டா கர்நாடகாவில் அணை கட்ட அனுமதி அளித்தார்கள் என்று?

இல்லை ஏன் லச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்று யோசித்தீர்களா? சரி இது நடந்து முடிந்த கதை

அராபிய நாடுகளில் சென்று வேலை செய்து பாருங்கள் இல்லை இருப்பவர்களைக் கேளுங்கள் தெரியும் இந்தியாவின் ஒற்றுமையும் அதில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையும்.

என்னை பொருத்தவரை இந்தியன், தேசப்பற்று என்று சொல்லித்தரப்பட்ட சித்தாந்தங்கள் நமக்கு நாமே பூசிக்கொள்ளும் அரிகாரங்கள் நிச்சயம் ஓர்நாள் கலைந்துவிடும் அல்லது கலைத்ததுதான் ஆக வேண்டும்.

இவை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, என் ஈழ மக்களுக்கு ஆறுதல் சொல்லும் உரிமையும் கூட பறிப்பதனால் வந்த உண்மையின் தெளிவு.
தேசம் போனால் இன்னொரு தேசத்தை உருவாக்கிவிட முடியும் ஆனால் இனம்போனால்???????????????????????????

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய