Monday, August 15, 2011

1947 ஆகஸ்ட் 15 மறக்கப்பட வேண்டிய தினம்...

1947 ஆகஸ்ட் 15 மறக்கப்பட வேண்டிய தினம்.

நாம் அடிமையாய் இருந்தோம்..... இருந்தோம்..... என்று சொல்லியே மனதளவில் இன்னும் அடிமைகளாகவே வாழ்கிறோம்.

அதன் விளைவுகள்தான், வெள்ளைக்காரனைக் கண்டால் இன்னமும் மண்டியிடுவது, மதிப்பளிப்பது. நம்மை நாமே தரக்குறைவாக நினைப்பது, நமது வழக்கங்களை மதிக்காமல் அவர்களது வழக்கங்களை பெரிதாக நினைப்பது.
அவர்களது பொருட்களை பெருமையாக எண்ணுவது போன்ற எண்ணங்களுக்கு காரணமே அந்த அடிமை புத்திதான்.

நான் சுதந்திரத்திற்கு முன்னும் வாழவில்லை, சுதந்திரம் வாங்கியபோதும் நான் இருக்கவில்லை ஆனால் எனக்கு எப்படி இந்த பாதிப்புகள் வந்தன.

அவர்கள் உலகத்தில் மற்ற நாடுகளை பிடித்தது திறமையினால் அறிவியலின் வளர்ச்சியினால் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவைகள் நம் நாட்டை பிடிக்க முடிந்ததன் காரணம் நம்மிடம் இருந்த நல்ல குணமும், ஒற்றுமையின்மையும், அவர்களிடம் இருந்த திருட்டு புத்தியும் தான் என்று அடித்து சொல்லுவேன்.

இதைத்தான் இன்று நாம் திறமை என்றும், வியாபார தந்திரம் என்றும் பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் செய்கிறோம்.

என் நாடு, என் இனம், என் மதம், என் சாதி, என் குடும்பம் என்பதெல்லாம் போய் நான் என்பது மட்டும் மிஞ்சி நிற்கும்.

தன்மானமில்லாமல், தனிமனித உரிமை இல்லாமல் என்ன சுதந்திரம் இங்கு வாழ்கிறது. நம் மக்களை நாமே கொல்வதா சுதந்திரம்?. இல்லை நம் மக்களிடம் நாமே கொள்ளையடிப்பதா சுதந்திரம்?.

ஊழலுக்கு எதிராக ஒரு வலிமையான சட்டம் நிறைவேற்ற முடியவில்லை பிறகு என்ன சுதந்திர தினம் வேண்டி கிடக்கு நமக்கு?. அதைக் கொண்டாட என்ன அருகதை இருக்கு நமக்கு?.

உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை ஒரு மாநிலம், ஒரு மாநிலத்தின் மக்களின் கோரிக்கையை மதிக்க வில்லை மத்திய அரசு. ஒரு மாநிலத்தின் தனது மக்களை இன்றும் கொன்று குவிக்கிறது இதே மத்திய அரசு, என்ன சுதந்திரம்? என்ன ஜனநாயகம் இது? இதில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடு.

பெரியார் சொன்னதுபோல் இதை ஓர் கறுப்புதினமாக அறிவிக்க வேண்டும். என்று ஊழலில்லாத, ஒற்றுமையான மக்களால் நல்லாட்சி நடத்தப் படுகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திர தினம்.

அடிமை படுத்திய ஆங்கிலேயன் கூட காந்தியை பத்திரமாக வைத்திருந்தான். விடுதலை வாங்கி நாம் எத்தனை ஆண்டுகள் நம்மால் அவரை பாதுகாக்க முடிந்தது?.

சமச்சீர் கல்வியை கலைக்க ஒரு மறைமுக கும்பலின் சதி நடக்கிறது தடுக்க முடியவில்லை, தென்னிந்தியாவின் உண்மையான வரலாறு பெரும்பாலும் அழிக்கப்படுகிறது அதை நிறத்த முடியவில்லை, மறைமுக திணிப்பு செயல்படுத்தப் படுகிறது, ஒரு குறிப்பிட்ட இனம் ஒடுக்குக்கப் படுகிறது இவற்றை எல்லாம் ஒழிக்க முடியவில்லை பிறகு எதற்கு இந்த சுதந்திர தினம்?. தன நட்டு மக்களை தரக்குறைவாக பேசும் ஒரு வெளிநாட்டவனை கண்டிக்க இயலாத வக்கத்த அரசுக்கு ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டம்.

இந்தியாவில் வேண்டாம் தமிழகத்தின் வரலாறு எத்தனை பேருக்கு தெரியும் இந்த சுதந்திர நாட்டில்?. அசோகர் மரத்தை நட்டார், ராஜ ராஜ சோழன் பெரிய கோயிலை கட்டினார், இந்திய சுதந்திரப் போராட்டம் இதைத்தவிர வேறு என்ன தெரியும் நமக்கு?

நியாயமாய் நடப்பவர்க்கு வாழ வழியில்லை, அநியாயத்தை எதிர்ப்போருக்கு உயிருக்கு உத்திரவாதமில்லை.

வாழ்க பாரத தேசம்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய