Monday, April 4, 2011

உன்னை கண்ட நாள்முதலாய்....

உன்னை கண்ட நாள்முதலாய்

என் உறக்கம் உறங்கி போனதடி

உயிரை விட்ட உடல்மட்டும்

இங்கு ஊர்வலம் போக காணுதடி

இதயம் இரண்டாய் பிளந்துகொண்டு

தனி தனியே துடிக்கப் பார்குதடி

இரவும் பகலும் இரண்டென கலந்து

எனை இடித்து இடித்து தல்லுதடி

சருகாய் விழுந்தேன் உன்பிரிவில்

விதையாய் வருவேன் உன் நினைவில்

உன் சுவாசம் வந்து போவதென்ன

உயிரை வதைத்து என்னை கொல்வதென்ன

கனவுகள் காண வழியுமில்லை

என் விழிகளை பிடிங்கினாய் ஏனோ தெரியவில்லை

என் இதயசுவரில் உன் பெயரே

எழுதிப்போனவள் நியே என் உயிரே

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய