Monday, April 4, 2011

நெஞ்சுக்குள்...

கண்ணுக்குள் இருப்பவளும் நீதான்

கவிதையாய் பிறப்பவளும் நீதான்

நெஞ்சுக்குள் இருப்பவளும் நீதான்

மனதை பிளப்பவலும் நீதான்

காதல் வரமென வாங்கிவந்தேன்

காலம் முழுதும் ஏங்கிவந்தேன்

உன்நினைவை மட்டும் தாங்கிவந்தேன்

என்னை நானே நீங்கிவந்தேன்

உன்புன்னகை என்னும் மந்திரம்தான்

என் நினைவை ஈர்க்கும் தந்திரம்தான்

உடலில் இன்று எந்திரம்தான்

மனதில் எங்கும் உதிரம்தான்

வார்த்தை ஒன்றை சொல்லிவிடு

இல்லை எனக்கு கொல்லியிடு

காதல் வந்தால் வசந்தகாலம்

இல்லை என்றால் இலையுதிர்காலம்

கண்கள் முழுதும் நீர்களின் கோலம்

நினைவுகள் தானே நம்மில் பாலம்

வார்த்தைகள் அதிகம் பரிமாறவில்லை

ஏக்கங்கள் மட்டும் நிறமாறவில்லை

கேள்விகள் ஏதும் புரியவில்லை

விடைகாணவும் எனக்கு தெரியவில்லை

விடுகதை நிறைந்த வாழக்கையிது

விடையில்லா விடுகதை போடுதது.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய