Monday, April 4, 2011

கணவாய் போனதே!

கனவுகண்டேன் வெறும் கணவாய் போனதே

உணர்வு கொண்டேன் உருக்குலைந்து போனதே

தமிழுக்கு ஒரு நாடு என்றும்

ஈழம்தான் அதன் வீடு என்றும்

ஈராயிரம் ஆண்டு பன்மையான இனம்

உலகை ஆண்ட தொன்மையான இனம்

அடிமை பட்டுதான் கிடக்குது அங்கே

அதனை காக்கும் உணர்வுதான் போனது எங்கே?

மாநாடு போடும் கூட்டம் இங்கே

தன்மான உணர்வுதான் போனது எங்கே?

அரைகூவல் விடுக்கும் எமது அன்பர்களே?

ஈழத்தின் அழுகுரல் உமக்கு கேட்களையோ?

கண்ணீர் வடிக்கும் எமது கண்களில்தான்

குருதி தோய்வது உமக்கு தெரியலையோ?

எம்மக்களின் கதிதான் உமக்கு புரியலையோ?

எம்மினத்திற்கு விடிவுதான் இன்னும் வரவில்லையோ?

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய