Monday, April 4, 2011

மனிதனாய் பிறந்து தொலைத்துவிட்டேன்...

கண்னே என் முன்னே நீ
கடந்துபோனாய் பெண்னே
நீ விண்னே நான் மண்னே
எனை மறந்துபோனாய் கண்னே

காதல் என்பது எரிவிளக்கா?
நான் மட்டும் இங்கே விதிவிலக்கா?

கண்களை மூடும் போதினிலே
என் மனமோ போகுது உன் மேனியிலே
பார்வை ஒன்றை வீசிவிட்டு
என் மனதை பறித்தாய் சலனமிட்டு

காதல் என்பது வந்ததடி
மனம் தீயில் தினமும் வெந்ததடி
உன்னை பார்த்தது ஒருமுறைதான்
நான் பிறந்தேன் இறந்தேன் மறுமுறைதான்
வார்த்தை ஒன்றை வீசிவிடு

மௌனம் திறந்து பேசிவிடு
உன்னை மறக்க வழியுமில்லை
என் உயிரை கொடுக்கவும் தெரியவில்லை
பாவம் உனக்கு வந்துவிடும்
எனை பகிர்ந்தே காதல் தின்றுவிடும்

முத்தம் ஒன்றை தந்துவிடு
சத்தமின்றி என்னை கொன்றுவிடு
காலடி தனிலே மண்னாவேன்
உன் அங்கம் தனிலே பொன்னாவேன்
மனிதனாய் பிறந்து தொலைத்துவிட்டேன்
என்னை நானே இன்று வெறுத்துவிட்டேன்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய