Monday, April 4, 2011

வீழ்வது நாமாய் இருப்பினும்....

தாயின் தாலாட்டு தமிழ்மொழியில்

தமிழனின் தன்மானமோ நடுவீதியில்

சிங்களம் சிரிக்குது சிறுநரியாய்

தமிழனின் சிந்தையோ வெறும்கரியாய்

சோழனின் வம்சமிங்கே சோறுடைக்குது

பாண்டியன் வம்சமோ பயனற்று கிடக்குது

பல்லவன் பெயர்தான் பாழாய் போச்சு

ஈழம் நிலையோ நிர்கதியாச்சு

சென்னையீல் சிங்கம் ஜெய்க்கனுமாம்

ஈழத்தில் புலிகள் தோர்கனுமாம்

சுயநலம் காப்பவர் இங்குண்டு

பிறர்நலம் பார்ப்பவர் எவருண்டு

வீழ்சிகள் என்பது படியாகும்

ஈழம் ஒருநாள் அரங்கேறும்

கண்களில் வழிவது நீரல்ல

தமிழன் என்றும் ஓடல்ல

வீழ்வது நாமாய் இருப்பினும்

வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய