Monday, April 4, 2011

அன்பே!

அன்பே!

உன் இமை என்ன திரைக்கதவா? இல்லை சிறைக்கதவா?
ஒரு முறைதான் திறந்தாய் ஆயிரம்முறை இறந்தேன்
உன் பார்வைக்கு ஏங்கி கொண்டேன்
என் பிறப்பிற்கு அர்த்தம் கண்டேன்

-------------------------------------------------------------

நிலா ஒன்றுதானா? இல்லை
இரண்டு என்பேன் உன் விழிகளை
உன் முகமதில் எழ்திவை "பூக்களை பறிக்காதே" என்று
ஆனால் வண்டுகளுக்கு எப்படி தெரியும்? புரியவில்லை எனக்கும்
-------------------------------------------------------------

அணைத்துக்கொண்டேன் என்னை நானே
உனக்கெப்படி தெரியும்? உன் நிழல் என்மேல்
உன்னை நினைத்து கண்களை மூடினேன்
சொர்க்கம் தெரிந்தது
கண்கள் திறந்தேன் சொர்க்கம் வந்தது,
என் எதிரில் நீ

-------------------------------------------------------------

உன்னை நித்தம் நினைத்தேன்
என் சித்தம் தொலைந்தது
நிலவை பிடித்தேன் விழியிலே
மலர்கள் தொடுத்தேன் உன் வழியில்
உன் பெயரை கேட்டேன் ஒருமுறைதான்
என் பெயரை மறந்தேன் மறுமுறைதான்

--------------------------------------------------------------

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய