Saturday, November 26, 2011

"புலிகள்" எங்கள் ராணுவம்...



எங்கள் தலைவா

தமிழ்த் தாயின் தலைமகன் நீ
எங்களின் வீரத் திருமகன் நீ
அடிமை விலங்கை அடித்துடைத்தாய்
தமிழனின் அவமானம் துடைத்தெடுத்தாய்

கொடுமைகள் கண்டு கோபம் கொண்டாய்
வீரத்தின் விளைநிலம் நாமே என்று வீருகொண்டாய்
நாடே வீடென்று காடு புகுந்தாய்
களமே கதியென்று ஆயுதம் கொண்டாய்
சமரே சரி என்று சரித்திரம் படைத்தாய்

தனிமனிதனாய் எழுந்தாய்
தாயகம் கொணர்ந்திட அழைத்தாய்
அமைப்பினை வளர்த்தாய்
நரிகளை அழித்தாய் 


வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
விவேகமற்ற வீரம் முட்டாள்தனம்

அரசியல் பங்கு படைத்தாய்
மரபுவழியில் சமர் செய்தாய்  

கரும்புலி கடமைசெய்தது
கடற்ப்புலி கோலோச்சியது
வான்புலி வானளாவியது
ஒன்றுபட்டு விடுதலைப்புலி
வீரம் பேசியது

மானம் காக்க
இனம் காக்க
அறம் நிற்க
மறம் உரைக்க
மாசற்ற மாவீரனாய்
தரணிக்கு தமிழனின்
அடையாளமாய்
சின்னமாய்
செயலாய்
எண்ணமாய்
எழுந்து நின்றாய்

இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற வீரனே
தமிழனை உலகுக்கு
அறிமுகப் படுத்தியவானே   
                  
தமிழன் என்றாய்
தனிநாடு வென்றாய்
ஈழம் அமைத்தாய்


நிகரில்லாதவரே
நெஞ்சை விட்டு நீங்காதவரே
துரோகம் உம்மை வீழ்த்தி விட்டதாய்
கொக்கரிக்கலாம்
நரிகளின் நயவஞ்சகம்
உம்மை மிஞ்சிவிட்டதாய்
நெஞ்சு புடைக்கலாம்

ஆனால் கடைசி உண்மைத் தமிழன்
ஒருவனாவது இருக்கும் வரை
உனக்கும் உமது கொள்கைக்கும்
மறைவென்பதே இல்லை


"புலிகள்" எங்கள் ராணுவம்
"பிரபாகரன்" எங்களுக்கு ஒரு மந்திரச்சொல்
"தமிழ் ஈழம்" எங்கள் தாரக மந்திரம்


தமிழீழ தாகம் இன்றுதான் தணியாத தாகம்

என்றுமே தணியாமல் இருக்கப் போவதில்லை
தணியும் வரை விடப்போவதும் இல்லை

   

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய