Thursday, November 17, 2011

பிழைத்துப்போ தமிழே!


பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!

உன்னை அழிக்க ஆயிரம் அரிவாள்!

அதனை எவர் இங்கே அறிவார்!

ஆயிரம் ஆண்டுகள் கடந்தவள் நீ!

காவிரிக் கரையில் வளர்ந்தவள் நீ!

உன்னை அழிக்க வந்தவர் எவரும்!

பிழைத்ததில்லை என்பதை உலகம் அறியும்!

பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!

இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
தழைத்துப்போ!

நம்மினத்தை அழைத்துப்போ!

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய