Friday, November 25, 2011

நிலையை என்னச் சொல்ல?




நிலையை என்னச் சொல்ல?
தண்ணீர் கொடுக்க தரம்கெட்ட
நிலையை என்னச் சொல்ல?
உச்சநீதி மன்றத்தை உதாசினப்படுத்தும்
நிலையை என்னச் சொல்ல?
குறுவைச் சாகும்
நிலையை என்னச் சொல்ல?
முல்லை பெரியாறு முடக்கப்படும்
நிலையை என்னச் சொல்ல?
விளைநிலம் தரிசாகும்
நிலையை என்னச் சொல்ல?
விவசாயின் விதியின்
நிலையை என்னச் சொல்ல?
சோறுடைத்த பொன்னாடு!
நீரின்றி வாடும்
நிலையை என்னச் சொல்ல?
நான் தான் ஏது செய்ய?
கட்டுண்ட எனது கரங்கள்
கருகி வீழட்டும்.

----------------------------------------------------------------------------------------------------------------

இனியும் சொல்லாதீர்கள்....

நாம் ஓர் இனம்
நாம் ஓர் குலம்
என்று.....

அழிவை தந்துவிட்டு
கண்ணீர் அஞ்சலி
ஒரு கேடு

துக்கம் தந்துவிட்டு
மனத்துயரம் ஒரு கேடு

மதிகெட்ட மாந்தர்களே.........


படங்கள்: ன்றி கூகுள்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய