Thursday, December 29, 2011

கண்ணீரை விலைக்கொடு...


ஆசைகளால் அடுக்கப்பட்ட
வாழ்க்கையிது

முறிக்கப்படும் பொழுதோ!

பறிக்கப்படும் பொழுதோ!
துன்பம் தலைவிரித்தாடும்
துக்கம் தொண்டையடைக்கும்

கனவுகள் கசக்கப்பட்டு

காகிதமாய் குப்பையில்
வீசப்படும்

துயரம் உன்னைத் துரத்தும்

எதுவுமே! எவருமே வேண்டாம்
என்ற எண்ணம் ஊற்றெடுக்கும்

மெய்ஞானம் மெல்ல விடைகொடுப்பதுபோல்

நன்கு நடிக்கும்
சித்தாந்தம் சில நேரம்
தலைகாட்டிச் சிரித்துவிட்டு
சிதறிவிடும்

நமக்காக ஒருவருமில்லை

என்கிற எண்ணம் எழுந்து
மேலே நிற்கும்

அறுபட்ட காத்தாடியாய்

மனம் அலைக்கழிக்கும்
ஆழிப்பேரலையாய்
அத்திரம் ஆர்ப்பரிக்கும்

துள்ளியெழுந்து மேலும்

துயரப்பட்டுவிடாதே

கண்ணீரில் கண்களைக்

கழுவிவிடு சிவந்து போகட்டும்
நாவு வறண்டு போகட்டும்

கண்ணீரை விலைக்கொடுத்து

அமைதியை வாங்கு

ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்

ஆயிரம் ஆயிரம் நம்பிக்கையை
உருவாக்கும்...

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய