Sunday, December 18, 2011

காகிதம்...













வெண்மையாய் இருந்த வெற்றுக் காகிதம்

ஆணிகளால் அரையப் பட்டிருந்தாலும்


அமைதி காத்தது அழகாகவே


தூரிகை துவலத்துவல நிறமேறியது


பச்சை வர்ணம் பளிச்சிட்டது


சிவப்பு வர்ணம் ஆங்காங்கே சிதறியது


நீல வர்ணம் நீண்டது


மஞ்சள் வர்ணம் மருகியது


கருப்பு வர்ணம் கனமின்றி பெருகியது


அங்கும் இங்கும் வர்ணக்கலவை


பெயரிட இயலா புதுப்புது வர்ணம்


காகிதத்தை காதலன் போல்


தொட்டு முடித்தது தூரிகை


அழகாய்த்தான் இருந்தது ஓவியம்


தனித்தன்மை இழந்தது காகிதம்


 

1 comment:

  1. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

உங்கள் கருத்தை நான் அறிய