Thursday, September 1, 2011

தமிழரை தூக்கில் ஏற்ற பாடுபடும் பார்ப்பனியம்

தமிழினத்தை தலை தூக்க விடாமல் தடுக்க முயலும் பார்ப்பனியத்தின் அட்டகாசம் கட்டுகடங்காமல் போகிறது. இன்றைய தினமலரின் தலைப்புச்செய்தி அவர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே அமைகிறது.

தமிழனை அந்த அளவிற்கு முட்டாளாக நினைத்து தமிழ்நாட்டில் இப்படி சதிச் செயலில் செய்திகளைபரப்பும் அந்த நாளிதழை தடை செய்ய வேண்டுமாய் ஒரு போராட்டம் நடத்தவேண்டும். அல்லது தமிழ்நாட்டு மக்களை ஒருதலைபச்சமாக நடத்த ஏமாற்ற முயலும் இது போன்ற புல்லுருவிகளை மக்கள் அடியாளம் கண்டு வளரவிடாமல் செய்ய வேண்டும்.

மூன்று அப்பாவிகளின் உயிரை காப்பற்ற தமிழகமக்கள் ஒன்றுகூடி போராடி வெற்றிகாண முயலும் அதே சமயம், தினமலர் இப்படி தீவிரவாதியை விடுதலை செய்ய நாங்களும் முயல்வோம் என்று காஷ்மீரின் முதலவர் டிவிட்டரில் கூறிய தனிப்பட்டக் கருத்தை ஊதி பெரிதாக்க முயவது ஏன்?

அவர் கூறுவோம் என்று சொன்னதை மாற்றி தலையங்கத்தில் காஷ்மீர் சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றி விட்டதுபோல் ஒரு மாயம் தோற்றம் உருவாக்கும் வண்ணம் செய்தியை வெளியிடுவது ஏன்?

அவர்கள் விடுதலைக்காக போராடும் மக்கள் சக்தியை குறைக்க முயலகிறதா? இல்லை எங்கே அவர்கள் விடுதலை பெற்றுவிடுவார்களோ என்று மத்திய அரசை பயமுறுத்த மத்த மாநிலங்களின் மூலம் குழப்பம் விளைவிக்க முயல்கிறதா? அல்லது தமிழனின் போராட்டம் வெற்றிபெற்று விடக்கூடாது என்று திசை திருப்ப முயல்கிறதா? இல்லை இவர்கள் விடுதலை பெற்றுவிட்டால் ராஜீவ் கொலைப் பின்னணியில் மறைந்திருக்கும் பல பார்ப்பனர்கள் சிக்கவேண்டி வருமே என்று அவர்களை காப்பாற்ற துடிக்கிறதா?

இந்த மறைமுக சதியின் நோக்கமென்ன என்று தமிழக மக்கள் உணரவேண்டும். தினமலர், துக்ளக், தினமணி போன்ற பார்ப்பன சார்பு நாளிதழ்களை ஒதுக்கி புறந்தள்ளுங்கள்.

பத்திரிகை தர்மத்தையும், அதன் சக்தியையும் தவறாக பயன்படுத்தி தமிழினமக்களுக்கு துரோகம் செய்யும் இதுபோன்ற நயவஞ்சகர்களை தலையெடுக்க விடாதீர்கள். கல்வி ரீதியாகவும், ஆளுமை ரீதியாகவும், மத ரீதியாகவும் வேற்றுமையை உண்டாக்கி, அந்நியர்களுக்கு காட்டிகொடுத்து இன்னும் பல வேலைகள் செய்து திராவிட இனத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க நினைத்து அடிமைப்படுத்த முயலும் இந்த சதிவேலையை உணர்ந்துகொண்டோம் என்று அவர்களுக்கு புரியவையுங்கள்.

தான் பதிப்பதையெல்லாம் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைக்கும் தினமணி, தினமலருக்கும் சரி, தன்னை ஒரு அரசியல் ராஜதந்திரியாக நினைத்துக்கொண்டு கண்டபடி பிதட்ரும் துக்ளக்கும் சரி மறைமுக பார்ப்பனிய ஆதிக்கத்தின் வேலையில் ஈடுபட்டு தமிழனை தலைதூக்க விடாமல் செய்யும் நோக்கமே தெரிகிறது.

இவர்கள் யார் நம்மை ஆள? இவர்கள் யார் நம் பண்பாட்டை தடை செய்ய? இவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்? இவர்களிடம் ஏன் நாம் கையேந்த வேண்டும்? யார் இந்த சோ? யார் இந்த சுப்ரமணிய சுவாமி? காந்தியை கொன்ற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது நீதி, தர்மம் பற்றி பேச?

அவர்கள் தாய் மொழி சமஸ்கிருதம். அவர்களால் எப்படி தமிழ்மீது பற்று கொள்ள முடியும்? தமிழ் மீது பற்றில்லாதவர்கள் எப்படி தமிழினத்தை காப்பாற்ற முயல்வார்கள்? தமிழ் ஈழம் மட்டுமல்ல தமிழ்நாடே அழிந்தாலும் அவர்கள் கவலை பட மாட்டார்கள். பிழைப்புக்காக தமிழ் பேசுபவர்கள் எல்லாருமே தமிழர்களா? பிழைக்க வந்த ஈனப் பிறவிகள் நம்மை ஆட்டிவைத்து போதும். இனியும் அவர்களை ஆடவிடுவது நம் அழிவிற்கு நாமே வழிவைத்தது போலாகும்.

அவர்களை தூக்கிலிட்டுதான் ஆகவேண்டும் என்றால் ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும், விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதில் காண வேண்டும். அதில் சம்பத பட்ட அனைவரையும் மக்கள் முன் நிறுத்த வேண்டும். அபொழுது தெரியும் யார் உண்மை இந்தியர்கள்? யார் உண்மை காங்கிரஸ்காரர்கள்? யார் உண்மை தமிழர்கள் என்று?

போதும் இழந்தவரை போதும் இன்னுமொரு செங்கொடி வேண்டாம், இன்னும் ஒரு முத்துகுமரன் வேண்டாம், இரண்டுலச்ச மக்களை பலிகொடுத்தது போதும்.

தினமணி, தினமலர், துக்ளக் இவற்றை உதாசீனப் படுத்தினாலே தமிழினம் தழைத்தோங்க தொடங்கிவிடும்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய