Friday, September 9, 2011

பிடிக்காதவளாகவே இருந்துவிட்டுப் போ...

உன் தங்கை வயிற்று தவப் புதல்வர்கள்
உன்னால் வாழ்வில் வளம்பெற்று
உன்னையே இழிவாய் பேசும்போது
பயனற்றுப் போகிறது என் கோபம்
பழகிய பழக்கத்தால்

உன்னை போற்றும் நான்
அடுத்தவன் உடமையை கொண்டு
உயிர்வாழ்கிறேன் என்று கூறியபோது
உணர்வற்று உயிரிழக்கிறேன் உள்ளத்தால்

கலையாய் கற்றுக்கொண்டு காசுபார்ப்பதற்க்கும்
உணர்வை விட்டுக்கொடுக்க முடியால்
உள்ளே உருகி தேய்வதற்கும்
வித்தியாசம் தெரியாத வீணர்கள் மத்தியில்
செத்துப் பிழைக்கிறேன் ஒவ்வொரு முறையும்

பிறரும் உன்னை போற்றி வாழ்ந்தகாலம் போய்
இருப்பவரும் உன்னை இழிவுபடுத்தும்
நிலைமையில் கையாலாகாத கைதியாய்
கட்டுண்டு கிடக்கிறேன்

பொறாமையில் பேசி
என்னைக் காயப்படுத்தி
உன்னை அழிக்கவும்
அவமதிக்கவும்
ஒரு கூட்டமிங்கே ஓயாமல் போராடுகிறது
கண்ணில் படாத கிருமியாய்
பயிரை வீணாக்கும் களையாய்
ஒட்டி உருஞ்சும் ஒட்டுண்ணியாய்
எனக்கது புலப்படுகிறது

உன்பெருமை அவர்களுக்கு ஏன் எரிகிறது?
எனக்கு தெரியும்
எம்மக்களுக்கு தெரியும்
உன் புகழ்பாட
போற்றி உனைக்காக்க
இன்றும் உனக்காய் உயிர் துறக்க
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் நங்கள்

இன்னும் இன்னும் உனக்கு பெருமைதான்
உன்னால் வாழும்
அவர்களுக்கு நீ பிடிக்காதவளாகவே இருந்துவிட்டுப் போ....

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய