Wednesday, September 29, 2010

காகிதம்

வெண்மையாய் இருந்த வெற்றுக் காகிதம்

ஆணிகளால் அரையப் பட்டிருந்தாலும்

அமைதி காத்தது அழகாகவே

தூரிகை துவலத்துவல நிறமேறியது

பச்சை வர்ணம் பளிச்சிட்டது

சிவப்பு வர்ணம் ஆங்காங்கே சிதறியது

நீல வர்ணம் நீண்டது

மஞ்சள் வர்ணம் மருகியது

கருப்பு வர்ணம் கனமின்றி பெருகியது

அங்கும் இங்கும் வர்ணக்கலவை

பெயரிட இயலா புதுப்புது வர்ணம்

காகிதத்தை காதலன் போல்

தொட்டு முடித்தது தூரிகை

அழகாய்த்தான் இருந்தது ஓவியம்

தனித்தன்மை இழந்தது காகிதம்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய