Monday, September 27, 2010

நிரந்தரமாய்.......................

தொலைந்து போன நித்திரை
எங்கோ தொலைந்துபோன என் நித்திரை
வலியவந்த வலிகளினால்
கலைந்துபோன நித்திரை
உழைப்புக்காகக் கலைத்தேன்
ஊருக்காகக் கலைத்தேன்
உறவுக்காகக் கலைத்தேன்
எங்கோ அதனை தொலைத்தேன்
கண்டடையும் முன்பு காலம் வந்தது
நித்திரை ஏற்க்க நிரந்தரமாய்

-------------------------------------------------------------
அவள் தான்
அவளே தான்

நினைவைப் பறித்துவிட்டு
நிதர்சமாய் சிரிக்கிறாள்
உணர்வை விதைத்தவள்
அறுவடைக்கு மறுக்கிறாள்

என்று அடிமை நான்
அவளின் அணைப்பிற்கு
இன்றும் குழந்தை நான்
அவளின் கரத்திற்கு

என்னைத் தாலாட்டி
பாராட்டி
சீராட்டி அமுதூட்டும் அன்னை
என் அன்னை
அவள் என் தமிழன்னை

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய