Friday, September 3, 2010

முகமூடியோடு

மூடி மறைத்த முகத்தோடு ஓடுகிறேன்
என் உண்மை முகத்தைத் தேடி
என்றாவது கண்டுப்பிடித்து விடுவேன்
என்ற முகமூடியோடு
----------------------------------------
கடுவுளாய் இருக்க முயற்ச்சித்தேன்
கயவன் என்றது உலகம்
பதறி ஓடினேன்
பைத்தியக்காரன் என்றது அதே உலகம்
எதுவும் தடுக்கவில்லை என் கருணையை
காசைத்தவிர
-----------------------------------------
இறந்தகால நினைவுகளை இழுத்து
நிகழ்காலத்தை இறக்கச் செய்யும்
என் தனிமை
-----------------------------------------
எந்திர வாழ்க்கையில்
சிக்கி சிதையும் பூக்களாய்
மகிச்சி

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய