Sunday, October 9, 2011

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்..... (மீள்பதிவு)

இது ஓர் ஆண்டுக்கு முன்பு நான் எழுதியது, இன்னும் எத்துனை நாள் மீள் பதிவுக்கு உயிர்ப்புடன் இருக்குமோ என்று தெரியவில்லை, இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளியும் புலப்படவில்லை. இந்தியன் என்பதில் பெருமைகொள்ளும் தமிழர் ஒருவராவது உணர்ந்துகொண்டால் போதும்.


வங்கக்கடல்தான் வருந்துதம்மா!

அரபிக்கடலும் அழுகுதம்மா!

குமரியும்தான் குமுறுதம்மா!

பரதவர் கொடுமை நடக்குதம்மா!

பாரதம் வேடிக்கை பார்க்குதம்மா!

கடற்ப்படைகொடுமை தொடருதம்மா!

கயவர் கைதான் படருதம்மா!


வலைக்களும்தான் அங்கே அருபடுது!

மீன்களும்தான் கொள்ளை இடுபடுது!

உயிர்பலிதான் நித்தம் நடைபெருது!

மானம்தான் கடலிலும் இழிபடுது!

கடலிலும் சிங்களர் கொடிதானோ?

நரிகளின் நாட்டமை ஏனோ?


தமிழன் என்றுதான் தனிக்கவேண்டம்!

இந்தியன் என்றாவது இறங்குகலேன்?

உயிரையும், உரிமையையும் தாருங்கலேன்?

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்?

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய