Tuesday, February 22, 2011

என்னைத் தேடி....

ஞானம் தேடி
ஞானியை அடைந்தேன்
நீ யாரென? கேட்டார் ஞானி

பெயரை சொன்னேன்
அது உன் பெயர்
நீ யார்? என்றார்

ஊரைச் சொன்னேன்
அது உன் ஊர்
நீ யார்? என்றார்

தொழிலை சொன்னேன்
அது உன் தொழில்
நீ யார்? என்றார் மீண்டும்

தெரியவில்லை என்றேன்
அதைத் தேடு என்றார்

திரும்பி வந்தேன்
என்னைத் தேடி.....

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய