Saturday, February 19, 2011

வாழ்க்கைப் பாதையில்...

வாழ்க்கைப் பாதையில்
எத்தனையோ சுவாரசியம்
நொடிக்கு நொடி ஆச்சர்யம்
எத்தனைத் தோல்விகள்
எத்தனைத் தடைகள்
எத்தனை எத்தனை வெற்றிகள்
எவ்வளவு இழிச்சொற்கள்
எப்படிப்பட்ட கேவலப் பார்வைகள்
தூற்றல்கள்
வன்சொற்கள்

இவையனைத்தையும் கடந்த பிறகும்
தெளிந்த பிறகும்
அடர்ந்தக் காட்டில்
விழும் பூப்போல்
கடலில் விழும்
ஒருதுளி நீர் போல்
மனதில் எங்கோ
ஒரு மூலையில்
ஒரு சிறு அழுத்தம்
இல்லை வருத்தம்
இல்லை இல்லை குறை
இம்ஹும் அதுவுமில்லை
நிறைவேராத ஒரு ஆசை
இன்னும் சரியாகச் சொல்லமுடியவில்லை

பேனாமுனை பந்துபோல்
ஒரு சிறு உறுத்தல் இன்னும்
உருண்டுகொண்டுதான் இருக்கிறது.

வேலை பளுவா?
அது நமக்கு கைவந்தக் கலைதான்
அதையும் ஊதியகிவிட்டது.

காதலா?
மூன்றுவருடமாக மூடிவைத்ததை
துப்பியகிவிட்டது.
இன்னும் அந்த உறுத்தல்
மறைந்தபாடில்லை
அது என்னவென்றும்
நான் அறிந்தபாடில்லை.

என்ன செய்ய நான்
ஐயோ தலை வெடித்துவிடும் போல் உள்ளதே
ஒருவேளை
நண்பன் புது வண்டி வாங்கினானே?
அதுவா கிடையாது கிடையாது
பொறாமை படும் பழக்கம் நமக்கில்லை
அப்படி என்றால் வேறென்ன?

புது வீடு கட்டிவிட்டேன்
வங்கியில் பணம் தேவைக்கு உள்ளது
சேமித்து விட்டேன்
வழக்கமாய் வீட்டுக்கு அனுப்பும்
பணத்தையும் அனுப்பிவிட்டேன்
இல்லை இல்லை
இது எதுவும் இல்லை
அது வேறு, அது இவையெதுவும் இல்லை.

அந்த உறுத்தல் இன்னும்
என்னை விட்டபாடில்லை
ஐயோ எனக்கு
பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளதே
ஒன்றுமே புரியவில்லை
என்ன இது இப்படி
என்னை வதைக்கிறதே

ஆ..... கண்டுபிடித்துவிட்டேன்.......
கண்டுபிடித்துவிட்டேன்.....

பதிப்பிட ஒன்றுமே கிடைக்கவில்லை........
அதுதான் இது

அப்பாடி................................

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய