Saturday, February 26, 2011

ஆறவிடாமல்...

என் மனமென்னும் கரையினில்
உன் நினைவுகளாய் பதிந்துவிட்ட
காலடி தடங்களை காத்துவருகிறேன்
களைந்து போகாமல்

உன்னுடன் உருகிய நேரத்தை
நிறுத்தி வைத்துள்ளேன் என்
மனக் கடிகாரத்தின் மணித்துளியில்
கடந்து போகாமல்

உன் இதழ் வழி உதிர்ந்த
வார்த்தைகளை அள்ளி மாலையாக்கி
மாட்டி வைத்தேன் மனக்கிடங்கில்
காய்ந்து போகாமல்

நாம் பரிமாறிக்கொண்ட பரிவர்த்தனைகளை
பட்டியலிட்டு எண்ணி என்னி
பார்க்கிறேன் எதுவொன்றும்
குறைந்து விடாமல்

இவற்றோடு இழத்து இழைத்து
இன்னும் இன்னும் கீறிக்கொள்கிறேன்
நீ தந்துவிட்டு போன காயங்களை
ஆறவிடாமல்.....

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய