Saturday, February 19, 2011

உளி...

கனவுகளோடு கட்டப்பட்ட வாழ்க்கையை
சுமந்து சுமந்து கூனிக் குறுகிப் போகும்
தருணமெல்லாம் நம்பிக்கையை என்னுள்
விதைத்தது அவமானங்கள்

வெற்றி விரைவில் வந்து சேரும்
என்னும் செய்தியை விரைந்து வந்து
சொன்னது தோல்விகள்

இதயம் இறுகிப்போய்
கனத்து கனத்து ஒடிந்துவிழ முயலும்
ஒவ்வொரு சமயமும் இளகச் செய்தது
இழிச்சொற்கள்

இப்படி என்னை சிறுது சிறுதாய்
செதுக்கி சிற்பமாய் செய்தது
சமுதாயம்...

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய