Wednesday, March 2, 2011

என்னோட நெனப்பெல்லாம்...

ஆத்தங்கர ஓரத்துல பொழுதுசாயும் நேரத்துல

உனப்பத்தி பாட்டெழுத ஏட்டேடுத்த வேளையில

வார்த்த ஒன்னும் தோனல வாடும் பயிர் சாகல

உன் நெனப்போட போழுதுசாஞ்சு போச்சு

ராவெல்லாம் தூக்கம்போயி போழுதுவிடிஞ்சு போச்சு

கரம்பையில குயல்கூட காத்திருக்குது

ஆடும் மயில்தான்னு உனநெனச்சு பாத்திருக்குது

தரிசுநெலம் போலதான் நான் கெடன்தேன்

விரிசலெல்லாம் மறந்சுபோவும்னு நீ இருந்த

ஊதக்காத்து அடிக்குது ஒடம்புக்குள்ள தொலைக்குது

உன்ன நெனச்சுகிட்டா குளிருங்கொஞ்சம் அடங்குது

கருக்கலிலே காத்திருந்தேன் கம்மாகர ஓரமா

உன்ன பாக்கத்தானே நீ வரும் நேரமா

சோளக்கருது இன்கேயே பூத்திருக்குது

மஞ்சப்பூசி வரும் உன்னபாக்க காத்திருக்குது

ஆத்தா அடிச்சுகூட நான் அழுததில்ல

நீ எனபாத்து சிரிக்கலன்னு அழுதுபுட்டேன்

பச்சநெல்லெல்லாம் நாத்தா இங்கே நட்டாச்சு

என்னோட நெனப்பெல்லாம் உன்காலில் போட்டாச்சு

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய